அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 25 மார்ச், 2022

பக்தி வெறியருக்குக் குட்டுகள்! பகவானுக்கும் குட்டு வைத்த நீதியரசர்!!

"கடவுளைக் காட்டி நீதியின் கண்களை மறைக்க முடியாது."

"போதுமான அளவுக்குக் கோயில்கள் இருக்கு. இன்னுமா கடவுள் கோயில் கட்டச் சொல்கிறார்?!"

"கடவுளே வந்து ஆக்கிரமிப்புச் செய்தாலும் நீதிமன்றம் தடை விதிக்கும்."

                                          *   *   *   *   *

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில், பொதுச் சாலையை ஆக்கிரமித்துக் கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்தக் கட்டுமானம் தங்களுக்கு உரிய இடத்திற்குச் செல்லும் வழியைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாயி என்பவர் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் தரப்புக்கு எதிரான உத்தரவைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்துக் கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 

விசாரணையின் முடிவில், குறிப்பிட்ட அந்தப் பொதுப் பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியிருக்கும் அனைத்துக் கட்டுமானங்களையும் இரண்டு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

அதே சமயம் இந்த உத்தரவில் நீதிபதி சில கருத்துக்களையும்[மேலே இடம்பெற்றுள்ளவை] பதிவு செய்துள்ளார்.

இது, இன்றைய[25.03.2022] பிற்பகல் செய்தி[https://www.dailythanthi.com/News/State/2022/03/25160803/Even-if-God-occupies-public-space-the-court-will-order.vpf].

கடவுளின் பெயரால் பக்தர்கள் செய்யும் அடாவடித்தனங்களால், பெரிதும் மனவேதனைக்கு உள்ளான நிலையில்தான் மேற்கண்டவாறு கடும் கண்டனங்களை நீதியரசர் தெரிவித்திருக்கிறார்.

நம் நீதிபதிகள் அவ்வப்போது இம்மாதிரியான குட்டுகளைப் பக்தி வெறியர்களுக்கு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.

"கடவுளே ஆக்கிரமிப்புச் செய்தாலும் தடை விதிப்போம்" என்று நீதிபதி சொல்லும் அளவுக்கு இவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்திருக்கின்றன.

இது அறிவியல் யுகம். இவர்கள் மட்டும் காட்டுமிராண்டிகளாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள்!

==========================================================================