பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 28 ஏப்ரல், 2022

காமம் 'காதல்' ஆன கதை![புதுப்பிக்கப்பட்டது]

'வயிறு பசிச்சா சோறு.  உடம்பு பசிச்சா ஆண் பெண் புணர்ச்சி. உழைச்சி அலுத்துப் போனா  உறக்கம்’   -இதுதான் மனிதனுக்கு [அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதும்கூட] இயற்கை வழங்கிய கொடை.

மேற்கண்ட மூன்று அடிப்படைத் தேவைகளோடு, ஆடம்பரம், பட்டம், பதவி, புகழ் என்று ஏராளமான தேவைகளை ஆறாவது அறிவு வாய்த்ததால் மனிதன் உருவாக்கிக் கொண்டான்.

இவை முற்றிலும் செயற்கையானவை.

தேவையற்ற பல ‘தேவை’களின் பட்டியலில் ‘காதல்’ என்ற ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

மனிதன் விலங்காக வாழ்ந்தவரை.....

காமம் கிளர்ந்தெழுந்த போதெல்லாம், ஆணும் பெண்ணும் தடங்கல் ஏதுமின்றி, உடலுறவு கொண்டு இன்பத்தில் திளைக்க முடிந்தது. மனிதர்களுக்கு ஆறாவது அறிவு வாய்த்த பிறகு இது சாத்தியம் இல்லாமல் போனது. 

பெண்ணைத் தன் உடைமை ஆக்கிக் கொள்வதில் ஆண்களுக்கிடையே உண்டான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, நம் முன்னோர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களுமே, தனிமனிதனின் இயல்பான உடலுறவு சுகத்திற்குப் பெரும் தடைக் கற்களாக அமைந்துவிட்டன. 

தவிர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளும் வேறு பல இடையூறுகளும் குறுக்கிடவே, ஆண் பெண் வேறுபாடின்றி, அனைத்து மக்களுமே செயற்கை உடலுறவு இன்பங்களை நாட வேண்டிய பரிதாப நிலை உருவானது!

இதிலும் முழு மன நிறைவு கிட்டாத நிலை தொடர்ந்த போது,  வெறுமனே ஒருவரோடு ஒருவர் பேசிக் களிப்பதிலும், பார்த்து இன்புறுவதிலும், உடலுறவு கொள்வதால் கிடைக்கும் சுகானுபவங்களைக் கற்பனை செய்து களிப்பதிலும் ஓரளவேனும் திருப்தி பெறுவதற்கான முயற்சியில் இருபாலரும் ஈடுபட்டார்கள். இம்மாதிரியான கற்பனைச் சுகங்களின் தொகுப்புக்குக் ‘காதல்’ என்று பெயர் சூட்டினார்கள்.

காலப்போக்கில், இந்தப் பொய்யான காதல் உணர்வைக் கவிதை, கதை, காவியம், நாடகம் ஆகியவற்றின் கருப்பொருள் ஆக்கினார்கள் படைப்பாளர்கள். இதன் விளைவு.....

காதல் அமரத்துவம் பெற்றது. 

ஆணோ பெண்ணோ ஒருவர் மீது மற்றவர் காமம் கொள்வதைக் காதல் என்று சொல்லிக்கொண்டு அலையும் ஒருவித 'மன நோய்' இளவட்டங்களிடையே தொற்று நோய்போல் பரவியது.

அது தோல்வியில் முடியும்போது, தற்கொலை செய்துகொள்வது ஒரு வழக்கமாக ஆகிப்போனது.

இந்த நோயைக் குணப்படுத்த உளவியல் மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கலாம். அல்லது,

நோய் தொற்றிய நபரை, தொற்றுக்கு உள்ளானபோதே, ஏதேனும் ஒரு வழியை[சரியோ தவறோ]க் கையாண்டு ஓரிரு முறைகளேனும் உடலுறவு அனுபவம் பெறச் செய்யலாம். இது பலனளிக்குமா என்று கேட்க நினைப்பவர்கள், காதலிப்பதாகச் சொல்லிக்கொள்பவர்களின் காதல், கல்யாணம் ஆனவுடன் காணாமல் போவதைக் கருத்தில் கொள்க!

வருகைக்கு நன்றி.

==========================================================================