அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 26 மே, 2022

எழுத்தாளர் 'கல்கி' ஆத்திகரா, நாத்திகரா?!

ம்பராமாயணச் சொற்பொழிவு நிகழ்ச்சி.

மறைந்த பிரபல எழுத்தாளர் 'கல்கி'தான் நிகழ்ச்சிக்குத் தலைவர்.

அரங்கம் நிரம்பி வழிந்தது.

கல்கி உரிய நேரத்துக்கு வந்து, தலைவருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் மட்டும் வந்துசேரவில்லை. பார்வையாளர்களிடேயே  ஒருவித அமைதியின்மை தெரிந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டார்கள்.

பதினைந்து நிமிடம் போல் தாமதமாக வந்துசேர்ந்தார் பேச்சாளர்.

மேடை ஏறி, ஒலிபெருக்கியைக் கையில் பிடித்ததும், 'இங்கே பேசுவதற்குத் தயார் செய்த குறிப்பை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன். பாதி தூரம் வந்த பிறகுதான் அது நினைவுக்கு வந்தது. திரும்பிப் போய்க் குறிப்புரையை எடுத்துவந்தேன்" என்று சொல்லி, தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்துத் தம் சொற்பொழிவைத் தொடங்கினார்.

பொழிவின் இறுதியில், "ராமாயணக் கதை கேட்ட உங்கள் அனைவருக்கும் நிச்சயம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்" என்று சொல்லி விடைபெற்றார்.

முடிவுரை வழங்குவதற்கு எழுந்த கல்கி, "ராமாயணக் கதை கேட்டவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்றால், அந்தக் கதையைச் சொன்ன உங்களுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி. ஆனால், நீங்கள் குறிப்புரையை எடுத்து வர மறந்தது போல், சொர்க்கத்துக்குப் போகும்போது, உங்களின் பாவபுண்ணியக் கணக்கேட்டை எடுத்துப்போக மறந்துவிட வேண்டாம். ஏனென்றால், சொர்க்கத்துக்குப் பயணம் மேற்கொண்டுவிட்டுப் பாதி வழியில் திரும்பி வருவது அத்தனைச் சுலபமல்ல" என்று சொல்லி முடித்தார்.

ஆரவார ஒலி அரங்கம் முழுக்கப் பரவியது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கலகலவென்று சிரித்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்!

கல்கி ஆத்திகரோ நாத்திகரோ, எழுத்தாயினும் பேச்சாயினும் கேட்போர் மனம் கவரும் வகையில் நகைச்சுவை கலந்து தருவதில் மிக வல்லவர். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!

=================================================================

குறிப்புரை:

மிகப் பழைய வார இதழ் ஒன்றில் வாசித்ததை நினைவுபடுத்திப் பதிவு செய்திருக்கிறேன். இதழின் பெயர், வெளியான ஆண்டு, நிகழ்ச்சி இடம்பெற்ற ஊர் என்று அனைத்தும் மறந்துவிட்டன. வயசாயிடிச்சி இல்லையா? ஹி... ஹி...ஹி!!!

=================================================================

*****ஜக்கி வாசுதேவ் கடவுள்களுக்கெல்லாம் குரு[சத்குரு]வோ அல்லவோ, கடவுள்களைக் காட்டிலும் புத்திசாலி என்பதில் சந்தேகம் இல்லை. கீழே உள்ள காணொலியே சாட்சி!