எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 27 மே, 2022

'முழக்கம்' எழுப்பு..... 'கோஷம்' போடாதே!

***laptop under repair!
#சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்த பல்வேறு நலத்திட்டத்  தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் பேசியபோது பாஜகவினர் எதிர்ப்புக்கோஷம் எழுப்பினர். திமுகவினர் எதிர்க்கோஷம் எழுப்பியதால் அரங்கமே அதிர்ந்தது# -இது இன்றையச் செய்தி[https://www.puthiyathalaimurai.com].

தமிழ்நாடு முதல்வர் பேசியபோது அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரங்கத்திலிருந்த பாஜகவினர் எழுப்பிய முழக்கம் 'பாரத் மாதா கி ஜே’ 

முதல்வரை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டதை, தமிழை ஒரு பொருட்டாக மதிக்காத 'இந்தி'யர்களான 'பாஜக' பிரமுகர்கள் கண்டித்ததாகத் தெரியவில்லை. கண்டித்து முழக்கமிட்டவர்களை உடனுக்குடன் அடக்கி வைத்திருந்தால் திமுக தொண்டர்கள் எதிர் முழக்கம் செய்திருக்கமாட்டார்கள். 

தலைவர்களை அவமதிக்கும் அநாகரிகம் அரங்கேறியிருக்காது.

இந்நிலையில், 'ஜே' போட்ட 'பாஜக' தொண்டர்களுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு.

உங்களின் தலைவர்கள் எப்படியோ, தொண்டர்களான உங்களுக்குத் தாய்மொழி[தமிழ்]ப் பற்று உண்டு என்று நம்புகிறோம். ஆகவே.....

இனி, எந்தவொரு சூழலிலும், இங்கே பாரத மாதாவை வாழ்த்த விரும்புவீர்களேயானால், "பாரத அன்னை வாழ்க" என்று முழக்கமிடுங்கள்; "பாரத் மாதாகி ஜே" இனி வேண்டாம்.

இந்தியர்களாக வாழ்ந்திட விரும்பும் நீங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், உங்களின் தாய்மொழி தமிழ் என்பதையும் மறவாதீர்! மறந்தால்.....

இந்த மண் உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

==================================================================

***பதிவை எழுதிமுடித்து, இணைப்பதற்குப் பொருத்தமான படமொன்றை இணையத்தில் தேடியபோதுதான் அண்ணாமலை அவர்களின் தமிழில் முழங்கச் சொல்லும் படம் தட்டுப்பட்டது. அதை மிக்க மகிழ்ச்சியுடன் தளத்தின் தலைப்பில் சேர்த்துள்ளேன். 

                                  *   *   *   *   *

***விழாவில், தமிழ்நாடு முதல்வர் ஆற்றிய உரையை உள்ளடக்கியது கீழே இடம்பெற்றுள்ள காணொலி: