அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 28 மே, 2022

அரைகுறையாய் முடிந்த அந்தரங்க உறவு!!!['ஹி... ஹி... ஹி!!!' கதை]

சில நாட்களுக்கு முன்பு, ஆண் நண்பர்களிடம் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த இயலாத ஒரு பெண், அவர்களுக்கு அந்தரங்க சுகமளித்துக் கடனைக் கழித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தச் செய்தியை அடியேனும் படித்ததன் விளைவு இந்த 'ஹி... ஹி... ஹி!!!' கதை.

                          *   *   *   *   *

சுந்தரி கவர்ச்சியான உடல்வாகு கொண்ட அழகான பெண்; திருமணம் ஆகிக் குறுகிய காலத்திலேயே கணவனிடம் 'மணவிலக்கு'ப் பெற்றவள்.

ஆண்களுடன் சகஜமாகப் பழகும் இயல்புள்ளவள் என்பதால் கணிசமான அளவில் ஆண் நண்பர்களைப் பெற்றிருந்தாள்.

அவள் ஆடம்பரப் பிரியையும்கூட. தினுசு தினுசாக ஆடைகள் வாங்குவதற்கும், தோழிகளுடன் அடிக்கடிச் 'சுற்றுலா' என்னும் பெயரில் ஊர் சுற்றுவதற்கும்  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துப் பெற்ற ஊதியம் போதுமானதாக இல்லாததால், தெரிந்த ஆண் நண்பர்களிடமும், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நிறையவே கடன் வாங்கினாள்.

ஆனால், வாங்கிய கடன் எதையுமே ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை.

கடன்கார ஆடவர்கள் இவளின் வீடு தேடி வந்து நெருக்கடி தரவே, அதிக அளவில் கடன் கொடுத்தவர்களில் சிலரிடம், "என்னால் கடனைத் திருப்பித் தர இயலாது. என்னோடு 'இருந்து' கடனைக் கழித்துக்கொள்ளுங்கள்" என்றாள். அவர்களும் சம்மதித்தார்கள்.

இது விசயம் காமராசு உட்படக் கடன் கொடுத்த மற்றவர்களுக்கும் தெரியவந்தது, 

தகவல் அறிந்த அன்றே சுந்தரியின் வீடு தேடிப் போனான் காமராசு.

இவனை அவள் முகம் மலர வரவேற்றாள்.

வெய்யிலுக்குக் குளிர்பானம் கொடுத்தாள்; உடல் சூடு தணியச் சில முத்தங்கள் கொடுத்தாள்.

அந்த முத்தங்கள் அவனை மேலும் சூடேற்றியது. அங்கிங்கெனாதபடி அவளின் மேனி எங்கும் முத்தமாரி பொழிந்தான்; ஆரத் தழுவினான்.....

இப்படியாகப் புற விளையாட்டுகளை ஆடி முடித்து அக விளையாட்டை ஆரம்பிக்க நினைத்து அவளின் ஆடை களைந்திட முற்பட்டபோதுதான் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அது நடந்தது.

அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சுந்தரி, "நீங்க எனக்குக் கொடுத்த கடன் எவ்வளவு?" என்று கேட்டாள்.

சற்றே யோசித்த காமராசு, "ஐநூறு ரூபாய்" என்றான்.

"ஆயிரத்துக்கும் மேலே கொடுத்திருந்தாத்தான் 'அது'க்கு அனுமதி. நீங்க கொடுத்த ஐநூறுக்கு இதுவே அதிகம். நீங்க போகலாம்" என்று கண்டிப்பான குரலில் சொல்லி வாயில் பக்கம் கை காட்டினாள் சுந்தரி.

காமராசுவின் மனநிலையை வர்ணிக்க உரிய வார்த்தைகள் இல்லாததால் இத்துடன் கதை முடிவடைகிறது!

======================================================================================