பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 20 ஜூலை, 2022

கழுதையும் கடவுளும் ஜக்கி வாசுதேவும்!!!

கேட்போருக்கும் புரியாமல், வாசிப்போருக்கும் புரியாமல், எதைப் பற்றிப் பேசுகிறார் என்பது அவருக்கும் புரியாமல் பேசிப் பேசிப் பேசியே மக்கள் மனங்களில் தானொரு மாபெரும் 'ஞானி' என்னும் மாய பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பவர், ஜகதீஸ் என்கிற ஜக்கி வாசுதேவ் என்பதைப் பலமுறை என் பதிவுகள் மூலம் வலியுறுத்தியிருக்கிறேன். 

அதை மேலும் உறுதிப்படுத்தவே இந்தப் பதிவு.

பேச்சோ எழுத்தோ எதுவானாலும், ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதை ஒட்டியே கருத்தைப் பதிவு செய்தல் வேண்டும் என்பது எழுத்துலக மரபு.

சத்குரு என்றுதனக்குத்தானே சூட்டிக்கொண்ட  பட்டத்தைப் பல்வேறு விமர்சனங்களுக்கிடையேயும் கைவிடாத 'விடாக்கண்டன்' ஜக்கி வாசுதேவ், 'பிரார்த்தனை' பற்றியதொரு கேள்விக்கு அளித்த பதில்[அடைப்பில் மஞ்சள் வண்ணத்தில் உள்ள விமர்சனங்கள் அடியேனுடையவை]:

#
எதற்காகப் பிரார்த்தனை செய்கிறீர்கள்? கடவுளை அறிந்துகொள்வதற்காகவா? அதல்ல உங்கள் நோக்கம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் முட்டாள் இயந்திரமாக கடவுளை நினைத்திருக்கிறீர்கள்[கடவுளை ஒரு இயந்திரம், அதுவும் முட்டாள் இயந்திரம் என்று எவரும் சொன்னதில்லை. இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை இவர் முட்டாள்கள் ஆக்கும் குயுக்தியைக் கருத்தில் கொள்ளுங்கள்].

உங்கள் பிரார்த்தனைகள் வெறும் சடங்குகளாக இருக்கும்வரை, ஒரு கோடிமுறை செய்தாலும், அதனால் பலனில்லை. பிரார்த்தனை என்பது வெறும் சடங்காக நின்றுவிடாமல், உணர்வில் மலர வேண்டும்[என்று சொல்கிற இவர் ஆதியோகி என்னும் பெயரில் பெரிய சிலை எழுப்பி அதற்கும், அங்குள்ள லிங்கத்திற்கு தீபாராதனை காட்டிச் சடங்குகள் செய்வது யாரையெல்லாம் முட்டாள்களாக்க?!]. 

கடவுளை வழிபடு, கேட்டதைக் கொடுப்பார் என்று உங்களுக்கு மறுபடி மறுபடி சொல்லப்பட்டிருப்பதால், அவரிடம் கோரிக்கைகளை வைப்பதையே பிரார்த்தனை என்று நினைத்துவிட்டீர்கள். அச்சத்தினாலோ, ஆசையினாலோ வழிபடுவது, பிரார்த்தனை அல்ல[அச்சத்தினாலும் ஆசையினாலும் செய்வதுதான் பிரார்த்தனை. இதெலென்ன தவறு?]. அது வெறும் சடங்குதான். கடவுளுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கழுதையைக் காட்டி அதை வழிபட்டால்தான் உங்கள் துன்பங்கள் தீரும் என்றால், அதையும் சந்தோஷமாகச் செய்வீர்கள், அப்படித்தானே?[எதையெல்லாமோ தின்று ஜீரணித்து மலம் கழித்து வாழும் ஜக்கி 'சத்குரு'-கடவுள்களின் குரு- ஆகலாமென்றால் கழுதை கடவுள் ஆவதில் தவறேதும் இல்லை].

துக்கத்தில் இருப்பவர்களால் கடவுளைத் தரிசிக்க முடியாது. ஆனந்தமாக வாழ்வது எப்படி என்று உணர்ந்து கொள்ளுங்கள். அதன்பின் கடவுளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்![ஆனந்தமாக வாழ்பவனுக்குப் பிரார்த்தனையே தேவையில்லை. 'தலைப்பு, பிரார்த்தனை; கடவுளைப் புரிந்துகொள்வது பற்றியல்ல' -இவை உலகமகா ஞானிக்குப் புரியாமல் போனது ஏன்?!].

மேலும் பாவம், புண்ணியம், மூளை, மனம் பற்றியெல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார் இந்தச் 'சத்து'க்குரு. விருப்பம் உள்ளவர்கள் முகவரியைச் சொடுக்கலாம்[https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/ethu-paavam-ethu-punniyam]. 
========================================================================================