எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 25 ஜூலை, 2022

வாழ்க 'குமுதம்' அதிபர் பா.வரதராசன்! வளர்க குமுதம்!!

//என் காளிக்கு எத்தனை நாவுகள்? சுமார் 780[இந்திய மொழிகள்].

இவற்றில் 22 மட்டுமே அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 38 மொழிகள் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன.

இவை ஒவ்வொன்றுக்கும் குடியேற்ற[?] அல்லது குடியேற்றப்பட்ட[ஒரு மொழியை அழியவிட்டு அதனிடத்தில் இந்தியைக் குடியமர்த்தி வளர்ப்பது?] வரலாறு உண்டு.

இந்த மாற்றத்தில் சில மொழிகள் பலியாயின; சில கொன்றழிக்கப்பட்டன.

தேசிய மொழி என்று எதுவும் இல்லை//

மேற்கண்ட வகையிலான மனதை வருத்தும் கருத்துரை இடம்பெற்ற நூல் அருந்ததிராயின் கட்டுரைகள் அடங்கிய 'ஆஸாதி'[மொழியாக்கம்: ஜி.குப்புசாமி] ஆகும்.

குமுதம் 'அரசு கேள்வி-பதில்'[27.07.2022]இல்.....

'சமீபத்தில் மனதை உலுக்கிய புத்தகம்?' என்னும் கேள்விக்குத் தரப்பட்ட பதிலில் இடம்பெற்ற புத்தகம்தான் இந்த 'ஆஸாதி'![அருந்ததிராய் இன்னும் ஆணித்தரமாகவும் பலருக்கும் தெளிவாகப் புரியும் வகையிலும் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கலாம்].

கடந்த காலங்களில் 'பாஜக'வுக்கு ஆதரவாளராகச் செயல்பட்ட 'பா.வரதராசன்' அவர்களின் இதழில்[குமுதம்], 'பாஜக'வின் இந்தி[மட்டுமே] வளர்ப்புக் கொள்கைக்கு எதிராகச் செய்தி வெளியானது அண்மைக்கால அதிசய நிகழ்வுகளில் ஒன்று!


வாழ்க குமுதம் அதிபர் பா.வரதராசன்! வளர்க குமுதம் இதழின் விற்பனை!!

===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக