அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 29 ஜூலை, 2022

பிராணாயாமமும் அந்திமக் காலப் பயணமும்!

ற்று முன்னர், 'பி.எஸ் ஆச்சார்யா'வின் 'பிராணாயாமம்' என்னும் புத்தகத்தை வாசித்தபோது, 11 உயிரினங்களின் சுவாச அளவு[நிமிடத்திற்கு], அவற்றின் ஆயுள் ஆகியவை பற்றிய பட்டியல் என் கண்ணில் பட்டது.

மனிதர்களைக் காட்டிலும் பாம்புகளும்[120], ஆமைகளும்[155] அதிக ஆண்டுகள் வாழ்வதை அறிய முடிந்தது. யானைகளின் ஆயுள் மனிதர்களைப் போலவே 100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'பிராணாயம்' என்னும் மூச்சுப் பயிற்சியை முறையாகப் பயின்று, அதைத் தொடர்ந்து செய்தால், ஒரு நிமிடத்தில் நாம் இழுத்துவிடும் மூச்சின் எண்ணிக்கை குறைவதோடு வாழ்நாளும் அதிகரிக்கும் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பட்டியல்:

பிராணாயாமப் பயிற்சி பற்றி புத்தகங்களில் படிக்க முடிகிறதே தவிர, பயிற்சி அளிப்பவர்கள் ஊரூருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

உங்கள் ஊரில் இருந்தால், பயிற்சியாளரை அணுகிப் பயன் பெறுங்கள்.

பயிற்சி பெறும் வசதி வாய்க்காதவர்களுக்கும், பிரணாயாமத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் ஆன பரிந்துரை:

சப்பணமிட்டு அமர்ந்து, நன்றாக மூச்சை இழுத்து, ஐந்தாறு நொடிகள் தேக்கிவைத்துச் சீராக வெளியேற்றும் பயிற்சியை 15 நிமிடங்களுக்குக் குறையாமல் தினமும் மேற்கொண்டாலே போதும்.

இதன் விளைவாகக் காலப்போக்கில் நாம் இழுத்துவிடும் மூச்சின் எண்ணிக்கை குறையும். 

குறைகிறதோ இல்லையோ, ஆயுள் கூடுவது சாத்தியமோ இல்லையோ, உயிர்க்காற்று[ஆக்ஸிஜன்] உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான ரத்தக் குழாய்களில் பரவுவதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துக் கொடிய நோய்களின் தாக்குதல் பெருமளவில் குறையும் என்பதும், அந்திமக்காலப் பயணம் அமைதி நிறைந்ததாக அமையும் என்பதும் உறுதி.

இது உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கான மிக மிக மிக அவசியத் தேவை ஆகும்!
=========================================================================