அதற்கு அவர்கள் பயன்படுத்திய கருவி 'வேதம்'.
மதங்கள் தோற்றுவிக்கப்பட்டபோதோ, சில காலம் கழித்தோ, அவற்றின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள், கடவுள் அருளியதாகச் சொல்லித் தத்தமக்கென ஒரு நூலை எழுதி வைத்துக்கொண்டு, 'வேதம்' என்று பெயர் சூட்டித் தொடர் பரப்புரை மூலம் அவற்றைப் புனிதமானவை ஆக்கிவிட்டார்கள்.
"கடவுள் என்னும் ஒருவர் இருப்பதே உறுதி செய்யப்படாத நிலையில், மனிதரால் படைக்கப்பட்டவற்றை[வேதங்கள்] கடவுள் வழங்கியதாகச் சொல்கிறீர்களே, இது நியாயமா?" என்று எவரும் கேள்வி எழுப்புவதில்லை.
காரணம், கடவுள் தண்டிப்பார் என்னும் பயம். அந்த அளவுக்கு மக்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
மரணங்கள் இயற்கையானவை.
இயற்கை மரணங்கள் நிகழ்ந்து தொலைக்கட்டும். இயற்கைக்கு மாறாக.....
தீராத நோய்களாலும், மதக் கலவரங்களாலும், வறுமையாலும் கோடானுகோடி மக்கள்[பிற உயிர்கள் உட்பட] சித்திரவதைப்பட்டுச் செத்தொழிந்திருக்கிறார்கள்; செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வேத மந்திரங்களை ஓதி இந்த மதவாதிகள் இவற்றைத் தடுத்து நிறுத்தாதது ஏன்?"
விசேச நாட்களில் மந்திரம் ஓதுகிறார்கள். தினம் தினம் ஓதுகிறார்கள்.
இப்படி இவர்கள் ஓது ஓது என்று ஓதிச் சாதித்ததது என்ன?