எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 8 ஜூலை, 2022

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழிசையை அவமதித்த அந்த 'அவன்' யார்?!

சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்ற புதுவை ஆளுநர் தமிழிசை அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து அபிசேக நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அவரை அணுகிய ஒருவன் அவரை வேறு இடத்தில் அமரச் சொல்லியிருக்கிறான்[காரணம் ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை].

அவனுக்குத் தமிழிசை அவர்கள் தந்த பதில்.....

"நான் இங்கேயே அமர்ந்திருப்பேன்" என்பது. அதை உரிமையுடன் சொன்னதாகவும் ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டிருக்கிறார்.

'உரிமையுடன்' என்னும் சொல்லை அம்மையார் அவர்கள் பயன்படுத்தியதிலிருந்தே, அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் அந்த நபர் நடந்துகொண்டிருக்கிறான் என்பது உறுதிப்படுகிறது.

ஆயினும், தான் அவமானப்படுத்தப்பட்டதை மூடி மறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள், "அவர்கள்[தீட்சிதர்கள்] எனக்கு வேண்டிய மரியாதையைக் கொடுத்தார்கள்" என்றும், "எனக்கும் நடராசருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை" என்றும் நிகழ்வுக்குத் தொடர்பில்லாத எதையெல்லாமோ சொல்லியிருக்கிறார்.

செய்தி:

#சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை, அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்று அங்கே உட்கார வைத்தார்கள். ஒருவர் அங்கே இருந்து எழுந்து செல்ல வேண்டும் எனக் கூறினார். நான் உரிமையோடு இங்கேயே அமருவேன் என்று கூறினேன். நான் அவருக்கு அடிபணிய மறுத்தேன் என்பது உண்மை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எனக்கு எந்த ஒரு மன வருத்தமும் ஏற்படவில்லை. எனக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன். யாரையும் அவமானப்படுத்துவது சரியான முறையல்ல. ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை” என்றார்# -https://tamil.samayam.com/?back=1

[இதே செய்தி பிற தளங்களிலும் வெளியாகியுள்ளது. https://www.puthiyathalaimurai.com/newsview/142865/Tamilisiai-Soundararajan-speaks-about-her-experience-in-Chidambaram-temple-yesterday

-https://tamil.oneindia.com/news/cuddalore/tamilisai-soundararajan-told-that-what-happened-to-her-in-chidambaram-natarajar-temple-465414.html].

மிழ் மக்களால் உருவாக்கப்பட்ட சிதம்பரம் நடராசர் கோயில் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமையானது.

வழிபட வருவோருக்கு இடையூறு இல்லாத வகையில் எங்கு வேண்டுமானாலும் இருந்து வழிபட உரிமையுண்டு. உண்மை இதுவாக இருக்க, மக்களில் ஒருவரான தமிழிசை[ஆளுநராக வேண்டாம்] அவர்களை இடம்பெயருமாறு சொன்ன அந்த நபர்/அவன் யார்?

கோயிலை நிர்வகிக்கிற தீட்சிதர்கள் குழு அவனின் அடாவடித்தனம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததா?

இல்லையெனின்.....

இவர்களுக்குக் கோயிலை நிர்வகிக்கும் உரிமையை வழங்கிய உச்ச நீதிமன்றம், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மாநில அரசு, அல்லது நடுவணரசுக்கு உத்தரவிடுமா?

'பாஜக' கட்சியைச் சேர்ந்த தமிழிசைக்காக, பாஜக மேல் மட்டத் தலைவர்கள் உரிய வகையில் முறையீடு செய்வார்களா?

மேற்கண்டவற்றில் எதுவும் நடைபெற வாய்ப்பே இல்லையெனின்.....

தனக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் இனத்துக்கே ஏற்பட்டதாகக் கருதித் தமிழ் மகளாகிய தமிழிசை அவர்கள் தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வாரா?

======================================================================================