எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ஒரு மாமனிதரும் 'மாநிலம்'[உலகம்] போற்றும் நீதியரசரும்!!!

கீழ்க்காண்பது கொஞ்சம் மணித்துளிகளுக்கு முன்னரான செய்தி['பாலிமர்' தொலைக்காட்சி. நேரம்: 03.45 பிற்பகல்]:

#என் மகனைப் பள்ளியில் சேர்க்க, 'இவன் சாதியற்றவன்' என்னும் சான்றிதழ் தேவை" என்னும் கோரிக்கையுடன் வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்தார் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ''மனோஜ்' என்பவர். இவர் கோரிக்கையை அவர் ஏற்காததால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இவர். 

இரு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்க வட்டாட்சியர் அவர்கள் மனோஜ் அவர்களின் மகனுக்குச் 'சாதியற்றவர்' என்னும் சான்றிதழை வழங்க ஒப்புக்கொண்டார்#

இச்செய்தி என்னை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பதிவுலக நண்பர்களுடன் பகிர்கிறேன்.

"இப்போதெல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க" என்று மனசாட்சியை அடகு வைத்துப் பொய் சொல்லித் திரியும் நம்மிடையே, ஜாதியற்ற மனிதராகத் தன்னை அறிவித்து, வருங்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டியாய் விளங்கும் இந்த 'மனோஜ்' என்னும் மாமனிதரை வாயாரவும் மனதாரவும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவோம்.

ஓர் உண்மை மனிதரின் கோரிக்கையை நிறைவேற்றிய உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்களையும் போற்றி நன்றி பாராட்டுவோம்,

வாழ்க மனோஜ்! வாழ்க நீதியரசர்[பெயர் தெரியவில்லை]!!

===========================================================================

இந்த அரிய நிகழ்வு தொடர்பான செய்தியைக் கூகுளில் தேடிப் பெறும் முயற்சி வெற்றி பெறவில்லை. 'மனோஜ்' அவர்களின் புகைப்படத்தை வெளியிடுவதும் சாத்தியமில்லாமல் போனது.