பக்கங்கள்

புதன், 17 ஆகஸ்ட், 2022

கள்ளக் காதலும் கணவனின் 'அந்த' உறுப்பை'க் கொதிநீரில் குளிப்பாட்டிய காரிகையும்!!!

ண்களுக்கும் 'கற்பு' உண்டு.

மணமான பிறகு காதல் மனைவியைத் தவிர இன்னொருத்தியைக் கனவிலும் மருவிச் சுகம் காணுதல் கூடாது என்பது தமிழர் பண்பாடு.

இப்பண்பாட்டை மறந்து பெண் பித்தர்களாக அலையும் காமுகர்களும்  இருக்கவே செய்கிறார்கள் அவர்களில் ஒருவர்தான்.....

தங்கராஜ்.


தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், உடன் பணிபுரியும் பெண்ணுடன் திருட்டு உடலுறவுச் சுகம் அனுபவிப்பதை வழக்கமாக்கியுள்ளார்.

இவரின் பாசத்திற்குரிய மனைவி பிரியா எவ்வளவோ கண்டித்தும் தன் காமக்கிழத்தியுடனான தொடர்பை இவர் துண்டிக்கவில்லை.

பொறுமையின் எல்லையைக் கடந்த பிரியா ஒரு நாள் நள்ளிரவில்.....

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார். கொதித்துக்கொண்டிருந்த அந்தச் சுடுநீரை, மல்லாந்த நிலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தங்கராஜுவின் அந்தரங்க உறுப்பின் மீது கொட்டிக் கணவன் மீதிருந்த கோபத்தைக் கொஞ்சமே கொஞ்சம் தணித்துக்கொண்டார். அப்புறம்?

அப்புறம் என்ன, காவல்துறைக்குப் புகார் அனுப்பிவிட்டுத் தன் குஞ்சிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனை சென்றார் தங்கராஜு.

பிரியாவைக் கைது செய்தது காவல்துறை.

கணவனின் அடாத செயலால், அளவிறந்த மன உளைச்சலுக்கு ஆளானதால்தான் இப்படியொரு தவிர்க்க இயலாத குற்றத்தைப் பிரியா செய்தார் என்பதால் காவல்துறை இவரை உடனடியாக விடுதலை செய்வதோடு, அப்பாவி மனைவிக்குத் துரோகம் இழைத்ததற்காகத் தங்கராஜுவைக் கைது செய்திடல் வேண்டும். 

இதற்காக நாட்டிலுள்ள அனைத்து மகளிர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராடுவது வரவேற்கத்தக்கதாகும்.

செய்வார்களா?! 
=========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக