அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 31 ஆகஸ்ட், 2022

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அமேசான்[கிண்டில்]!

ண்டுதோறும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தவிர, தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கும் பணப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிப்பதோடு, அதன் வளர்ச்சியிலும் தன் பங்களிப்பைச் செலுத்திவருகிறது அமேசான் வணிக நிறுவனம். அது, தன் தளத்தைத் தமிழிலும் காட்சிப்படுத்தும்[மொழியாக்கம்] வசதியைச் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான[2022] போட்டியையும்[pentopublish5] அது அறிவித்திருக்கிறது. அறிவிப்புச் செய்து பல நாட்கள் ஆகிவிட்டன.

அக்டோபர் 10ஆம் தேதிவரை எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அமேசான் கிண்டிலில் வெளியிடுவதன் மூலம் போட்டியில் பங்கு பெறலாம்.

மற்ற விவரங்களுக்கு, https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031என்ற முகவரியைக் கிளிக் செய்து உள்நுழைக.

நான் கடந்த 2 ஆண்டுகளாகக் கலந்துகொண்டு வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்[ஹி... ஹி... ஹி!!!] என்றாலும், நான் 2 புதிய நூல்களை வெளியிட இந்தப் போட்டி காரணமாக இருந்தது என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே.

பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்யப்படும் முறை:

The winner will be selected in two phases:

First Round: Each eBook will be rated based on the commercial viability of the eBook (including, without limitation, with regards to the eBook’s sales, borrows and customer feedback). We will look at metrics in a fair and normalized manner.

Final Round: Up to 10 entries will be selected at the end of first round for each language. These will then be read by our eminent panel of judges and scored to identify the winner.


பொதுவாக, அமேசானில் வெளியிடப்பட்ட என் நூல்களை[41]ப் பொருத்தவரை, விற்பனை மிகக் குறைவு; வாடகைக்கு வாங்கி வாசித்துத் திரும்ப ஒப்படைப்போர் எண்ணிக்கையும் குறைவுதான். 'மதிப்புரை' பெறுவது அதனினும் குறைவு.


எனினும், வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதால் மாதந்தோறும் ஒரு தொகையை[எவ்வளவு என்பது பரம ரகசியம்!] அமேசான் என் வங்கிக் கணக்கில் சேர்க்கிறது[நம் தமிழ்நாட்டுப் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்தால் பைசா பெயராது. நாம் முதலீடு செய்யும் தொகையும் திரும்பக் கிடைக்காது].


நூலாசிரியனுக்குரிய பங்குத் தொகையை வழங்குவதில் அமேசான் நேர்மையாக நடந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, 'நம் படைப்பு, போட்டியில் பங்குபெறும் தமிழ்ப் படைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அது, இலக்கிய உலகில் நம் மொழிக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்யும்' என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

===========================================================================