எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 1 செப்டம்பர், 2022

இஸ்லாம் நாடுகளும் பெண்கள் மீதான அடக்குமுறைகளும்!!!

 அது 2009 ஆம் ஆண்டு.

அந்த இஸ்லாமியப் பெண்ணின் பெயர் மரியம் கரிமி. 6 வயதான ஒரு குழந்தையின் தாய்.


கணவன் அவரை மூர்க்கத்தனமாகச் சிதிரவைதை செய்வது வழக்கம். பெண்ணின் தந்தை அவரைத் திருத்த முயன்றார்; முடியவில்லை.


மரியம் கரிமியை மணவிலக்குச் செய்யவும் மறுத்தான் அவரின் அந்தக் கொடூரப் புத்திக் கணவன்.


அவன் இழைத்த வன்கொடுமைகளிலிருந்து விடுபடவே இயலாத நிலையில், மரியம் கரிமியும் அவளின் தந்தையும் இணைந்து அந்தக் கெடுமதியாளனைக் கொன்றுவிட்டார்கள்.


இருவரும் கைது செய்யப்பட்டார்கள். குழந்தை தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்தது.


ஷரியா நீதிமன்றம், மன்னிக்கப்பட வேண்டிய மரியம் கரிமிக்கும் அவள் தந்தைக்கும் மரண தண்டனை விதித்தது. ஆனால், தண்டனை நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டது. தந்தை காலமானார்.

22 பிப்ரவரி 2021 அன்று, மரியம் தூக்கிலிடப்படும் சிறைக்கு மாற்றப்பட்டார். தண்டனையை நிறைவேற்றுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது.


பின்னர் அதற்கான நேரமும் வந்தது. மரியத்தைக் காவல்துறையினர் தூக்கில் போடவிருப்பதாக 'ஈரான் வயர்' செய்தி வெளியிட்டது.


மரியம் கரிமியின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டப்பட்டது. அவர் நாற்காலியில் நிற்க வைக்கப்பட்டார். மரியத்தின் மகள்[18 வயது] நாற்காலியை உதைத்து அதை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டாள். அவள் மறுக்கவே மிரட்டப்பட்டாள்.


உயிருக்குப் பயந்து மகள் நாற்காலியை எட்டி உதைத்தாள். பெற்ற அன்னை தூக்கில் தொங்கினாள்.


பதை பதைக்கச் செய்யும் இப்படியானதொரு பயங்கரம் இவ்வுலகில் நிகழ்ந்தது உண்டோ?

உண்டு... ஈரானில்!


சவூதி அரேபியாவில், சமூக வலைதளங்களில் பதிவிட்டதால்[வெறும் பதிவுதான்; குத்துவெட்டோ கொலையோ அல்ல] ஒரு வாழ வேண்டிய நடுத்தர வயதுப் பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது பரபரப்பான ஓர் ஊடகச் செய்தி.


ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்கள்[இஸ்லாமியப் பெண்கள்தான்] அதிகபட்ச அடக்குமுறைக்கு ஆளாவது உலகறிந்தது.


அனைத்து நாடுகளிலுமே ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், இஸ்லாம் நாடுகளின் ஆண்களோடு ஒப்பிடும்போது அவர்கள் 'தேவலாம்' என்றே சொல்லத் தோன்றுகிறது.

===================================================

https://hindustannewshub.com/world-news/the-limits-of-cruelty-crossed-in-iran-the-mother-was-hanged-at-the-hands-of-the-daughter-know-what-is-the-whole-matter/