பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 27 அக்டோபர், 2022

ஓர் எளிய கேள்வியும் நாம் அறிந்திராத அரிய பதிலும்!


"இறந்த உடலில் உள்ள 'உடலுறுப்புகள்' எவ்வளவு மணி நேரம்வரை உயிர் வாழ்கின்றன? விளக்கம் தருக"[ta.quora.com].

பதில்:

ஒரு மனிதன் இறந்த பிறகு அதிகப்படியாக நான்கு நிமிடங்கள்வரை சில உறுப்புகள் செயல்படும். பிறகு அவையும் செயலிழந்துவிடும்.


முதலில் இதயம் செயலிழக்கிறது. அதன் விளைவு மூச்சுவிடுதல்[சுவாசம்] நின்றுபோகிறது.


இதயம் இயங்காததால் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து செல்லும் இரத்தம் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.


மூச்சு நின்றுவிடுவதால், தூய 'உயிர்க்காற்று'[ஆக்ஸிஜன்] உடம்புக்குள் செல்வது தடைப்படுகிறது. எனினும்.....


மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தங்கள் வசம் ஏற்கனவே உள்ள இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தி நான்கு நிமிடங்கள்வரை வேலை செய்யும்[நன்றி: விஸ்வநாதன் இராமசேசன், பொது மருத்துவ நிபுணர்]. 


அதன்பிறகு.....


ஒட்டுமொத்த உறுப்புகளும் செயலிழக்க, உயிர் என்றோ, ஆன்மா என்றோ, ஆவி என்றோ ஒன்று இருந்தால் அது, 'பிணம்' என்று புதிய நாமகரணம் சூட்டப்பட்ட உடம்புக்கு 'Bye' சொல்லிப் பிரியா விடை பெற்றுவிடும்.



* * * * *

புதிய பதிவு தயாரானதும் மீண்டும் சந்திப்போம்.


"Bye... Bye... Bye"


குறிப்பு:

'பசி'பரமசிவம் 'முனைவர்'[மருத்துவம் படிக்காத 'டாக்டர்'!] பட்டம் பெற்றவராம்; முன்னாள் தமிழ்ப் பேராசிரியராம். 'Bye'க்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் தெரியல. வெட்கக்கேடு!

===============================================================================