எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 27 அக்டோபர், 2022

ஓர் எளிய கேள்வியும் நாம் அறிந்திராத அரிய பதிலும்!


"இறந்த உடலில் உள்ள 'உடலுறுப்புகள்' எவ்வளவு மணி நேரம்வரை உயிர் வாழ்கின்றன? விளக்கம் தருக"[ta.quora.com].

பதில்:

ஒரு மனிதன் இறந்த பிறகு அதிகப்படியாக நான்கு நிமிடங்கள்வரை சில உறுப்புகள் செயல்படும். பிறகு அவையும் செயலிழந்துவிடும்.


முதலில் இதயம் செயலிழக்கிறது. அதன் விளைவு மூச்சுவிடுதல்[சுவாசம்] நின்றுபோகிறது.


இதயம் இயங்காததால் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து செல்லும் இரத்தம் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.


மூச்சு நின்றுவிடுவதால், தூய 'உயிர்க்காற்று'[ஆக்ஸிஜன்] உடம்புக்குள் செல்வது தடைப்படுகிறது. எனினும்.....


மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தங்கள் வசம் ஏற்கனவே உள்ள இரத்தத்தையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தி நான்கு நிமிடங்கள்வரை வேலை செய்யும்[நன்றி: விஸ்வநாதன் இராமசேசன், பொது மருத்துவ நிபுணர்]. 


அதன்பிறகு.....


ஒட்டுமொத்த உறுப்புகளும் செயலிழக்க, உயிர் என்றோ, ஆன்மா என்றோ, ஆவி என்றோ ஒன்று இருந்தால் அது, 'பிணம்' என்று புதிய நாமகரணம் சூட்டப்பட்ட உடம்புக்கு 'Bye' சொல்லிப் பிரியா விடை பெற்றுவிடும்.



* * * * *

புதிய பதிவு தயாரானதும் மீண்டும் சந்திப்போம்.


"Bye... Bye... Bye"


குறிப்பு:

'பசி'பரமசிவம் 'முனைவர்'[மருத்துவம் படிக்காத 'டாக்டர்'!] பட்டம் பெற்றவராம்; முன்னாள் தமிழ்ப் பேராசிரியராம். 'Bye'க்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் தெரியல. வெட்கக்கேடு!

===============================================================================