பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 28 அக்டோபர், 2022

காமம் கொடியது! எந்தவொரு நோயினும் வலியது!!

து ஒரு கள்ளக் காதல் கதை. பெங்களூருவில் நேற்று[27.10.2022] நடந்த இந்தக் கதை நிகழ்ச்சி ஒரு மர்மக் கதையைப் போல் சுவாரசியமானது.

கல்யாணம் ஆன ஒரு வயசுப் பொண்ணு அவள். புருசன் தர்ற புணர்ச்சி சுகம் கட்டுபடி ஆகாததால் ஒரு கள்ளப் புருசனைத் தேடிக்கொள்கிறாள்.

அவனிடம் அவள் எதிர்பார்த்தது கிடைத்தது. ஆனாலும் என்ன, நினைத்த நேரங்களில் நினைத்தபடியெல்லாம் அனுபவிக்க விடாமல் புருசன்காரன் இடையூறு பண்ணுகிறான்.

பாவம் அவள். புருசனை அடக்க வேறு வழி எதுவும் தென்படாத நிலையில், அவனைப் போட்டுத்தள்ளிவிட முடிவெடுக்கிறாள். ஒரு நல்ல நாளும் அதுவுமாக கள்ளக் காதலனை மாடியில் தங்கவைத்து மணாளன் வந்ததும் அவனை மாடிக்கு அழைத்துச் செல்கிறாள்.

காதலனிடம் ஒரு மரக் கட்டையைக் கொடுத்துத் தாலி கட்டியவனைத் தாக்கச் சொல்லுகிறாள். அவனும் தப்பாமல் அதைச் செய்து முடிக்கிறான்.

அடுத்து நிகழவிருப்பது எவரும் எதிர்பாராதது.

கணவனை அடித்து வீழ்த்தக் கள்ளக் காதலனிடம் மரக்கட்டையைக் கொடுத்த காரிகை[Shwetha என்பது அவள் பெயர்] கூரிய ஒரு கத்தியையும் கொடுத்தாள். அந்தக் கத்தியால்.....

'நறுக்'கென்று சந்துருவின் அந்தரங்க உறுப்பை வெட்டித் தள்ளினான் க.காதலன் சுரேஷ் dnawebdesk@gmail.com (DNA Web Desk) - Yesterday 9:45 pm].

கட்டிய புருசன் வேண்டாம் என்றால் விவாகரத்துச் செய்யலாம். அது சாத்தியப்படாமல், கள்ளக் காதலனுடனான சல்லாபத்துக்கு அவன் இடையூறாக இருந்தால் கொலையும் செய்யலாம் என்பது எழுதப்படாத கள்ளக் காதலர் நீதி.

கள்ளக் காதலர்களில் ஒருத்தியான இந்த ஸ்வேதா வேண்டாத புருசனைக் கொலை செய்தாள், சரி. அவனுடைய ஆணுறுப்பை வெட்டி எடுக்கச் செய்தாளே, அது ஏன்?[இன்று அதிகாலை முதல் சற்று முன்னர்வரை யோசித்தும் விடை கிடைக்கவில்லை].

"காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே" என்கிறார் ஒரு சங்க காலப் புலவர்.

'காமம் அச்சுறுத்துப் பேயல்ல[அணங்கு>பெண் தெய்வம்]; வருத்தும் நோயும் அல்ல' என்று தேற்றும் அளவுக்குக் காம உணர்ச்சி அக்காலத்தில்[மக்களை நோகடித்திருந்தாலும்] ஒரு கட்டுக்குள் இருந்திருக்கிறது.

ஆனால் இக்காலத்தில், "காமம் கொடியது; எந்தவொரு நோயினும் வலியது" என்று எச்சரிக்கும் அளவுக்கு இது பெரும் தீங்குகளை விளைவிக்கிறது என்பதற்கு ஸ்வேதாவின் குரூரச் செயலும் ஓர் எடுத்துக்காட்டாகும்!

* * * * *

#..... Chandru had moved his wife to Yelahanka following this occurrence. Her lover Suresh continued to contact her in the meantime. Then, finding it difficult to carry on with her affair, Shwetha asked Suresh to kill her husband. When Chandru arrived home on October 21, Shwetha led him to the rooftop, where Suresh was hiding, and assaulted him there.

According to the police, Shwetha gave her lover a wooden log to hit Chandru with. Police claimed that she had also given him a knife and used it to hack her husband's private area. After killing Chandru, Shwetha pretended that nothing had happened and asserted that Chandru hadn't come home from work. Family members started looking for Chandru when he didn't come home, and they eventually found him on the rooftop.....#

https://www.dnaindia.com/india/report-bengaluru-woman-gets-lover-to-cut-off-
husband-s-private-part-both-arrested-for-murder-2996468 [copy&paste]