அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 31 அக்டோபர், 2022

தமிழ் வழியில் மருத்துவக் கல்வி! மு.க.ஸ்டாலின் வாழ்க!! தமிழ் வளர்க!!!

சென்னையில், ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ள பேருவகை அளிக்கும் ஒரு செய்தி:

#புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ளன. அவற்றிற்கு நடுவணரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், தமிழில் மருத்துவம் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஓராண்டாகத் தமிழ் மொழியிலான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது# https://www.dinamani.com/tamilnadu/2022/oct/31/ma-subramanian-press-meet-3940968.html  31.10.2022.

***மருத்துவக் கல்வி தமிழில் பயிற்றுவிக்கப்படும் அதே வேளையில், தேவைப்படும்போதெல்லாம், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழியையும் கையாளுவதில் தவறேதும் இல்லை.


கல்வி கற்பிப்பது தமிழ்வழியிலாயினும், மாணவர்களின் ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துதல் வேண்டும்.


தமிழ் வாயிலாகக் கற்று மருத்துவராகும் இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றியும் அரசு இப்போதிருந்தே திட்டமிடுதல் அவசியம்.


ஆங்கில வழிக் கல்வியே வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பெற்றோரைக் கருத்தில்கொண்டு, தமிழ்வழியில் மருத்துவம் பயில்வதால் விளையும் நற்பயன்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிடுதல் மிகவும் பயனளிப்பதாக அமையும்.


தமிழ்நாடு அரசுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்.