பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 16 அக்டோபர், 2022

பித்தம் தலைக்கேறிய புடின்!!!

'ஐக்கிய நாடுகள் சபையின்(UN) அதிகாரி ஒருவர், 'இராணுவ மூலோபாயத்தின்' ஒரு பகுதியாக உக்ரேனியர்களைப் பாலியல் ரீதியாகத் தாக்கும்[பெண்களை]வகையில், ரஷ்யா தனது சிப்பாய்களுக்கு வயாகரா போன்ற போதைப் பொருட்களை வழங்குவதாகக் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உக்ரைனில் பெண்களைக் கற்பழிக்க ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா வழங்கப்படுகிறது'[ஆதாரம் கீழே].

நாடுகளுக்கிடையே போர் நிகழும்போது, போர் வீரர்கள், வாய்ப்பு அமையும்போது தம்மிச்சையாக, எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குவது அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிற அவலம்தான்.

நாட்டை ஆளும் தலைவர்களுக்கும் இது தெரியும் என்றாலும், தத்தம் வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்துத் தடுக்க இயலாதது இது என்பதையும் அவர்கள் அறிந்தே இருப்பர்.

வெற்றியா தோல்வியா, வாழ்வா சாவா வாய்க்க இருப்பது எது என்று கணிக்க இயலாத நிலையில் அவர்கள் இதை அலட்சியப்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், மேற்கண்ட உக்ரேனியப் போர் குறித்த நிகழ்வில் .....

ரஷ்யா தனது சிப்பாய்களுக்கு வயாகரா போன்ற போதைப் பொருட்களை வழங்குகிறது என்னும் செய்தியில், 'ரஷ்யா வழங்குகிறது' என்பது ரஷ்ய அரசாங்கத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

அரசாங்கம் வழங்குகிறது என்றால் அது ரஷ்யாவின் அதிபரான 'புடின்' அவர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.


தாமாகத் தொடுத்த போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், மன நிலை பாதிக்கப்பட்டோ என்னவோ, தெய்வங்களின் நிலையில் வைத்துப் போற்றப்படுகிற[பெரும்பாலான நாடுகளில்] பெண்களை வன்புணர்வு செய்து சிதைத்துச் சீரழித்து அழிக்கும் அடாத செயலைச் செய்திடப் புடின் வழிவகுக்கிறார் என்றால், பித்தம் அவரின் தலை உச்சியைத் தொட்டுவிட்டது என்றே நம்பத் தோன்றுகிறது!

===================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக