வெள்ளி, 11 நவம்பர், 2022

ஆசிரியர்களைப் பெரிதும் மதிக்கும் நாடுகள்!


*அமெரிக்காவில் மிக உயர்வாகக் கருதப்படுபவர்கள் விஞ்ஞானிகளும் ஆசிரியர்களும்.

*ஃபிரான்ஸின் நீதிமன்றங்களில் நாற்காலிகளில் அமரும் உரிமை ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

*ஜப்பானில், ஆசிரியரைக் கைது செய்வதற்கு அரசிடம் அனுமதி பெறுதல் வேண்டும்.

*கொரியாவில் அடையாள அட்டை வைத்திருக்கும் ஆசிரியருக்கு அந்நாட்டு அமைச்சருக்கு வழங்கப்படும் உரிமைகளும் மரியாதைகளும் வழங்கப்படும்.

*ஆமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் முதன்மை[?] ஆசிரியர்கள் அதிக அளவில் ஊதியம் பெறுகிறார்கள்.

மேற்கண்ட நாடுகளில் இந்த அளவுக்கு ஆசிரியர்கள் மதிக்கப்படுவதற்கு அவர்கள் சமூகத்தை 'வடிவமைப்பவர்கள்' என்பதால்தானாம்!

ஆசிரியர்களை அவமதித்தால் சமூகத்தில் திருடர்கள், ஊழல் செய்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டவர்கள் நம்புகிறார்களாம்.

                                             *   *   *   *   *

***இந்தச் செய்தித் தொகுப்பு, மாணவர்களால் 'போர் ஆசிரியர்' என்று செல்லமாக[ஹி...ஹி...ஹி!!!] அழைக்கப்பட்ட 'பேராசிரியர்' ஆன அடியேனின்  'WhatsApp'க்கு ஆசிரிய நண்பர் ஒருவர் அனுப்பியது.   

=========================================================================