எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 21 டிசம்பர், 2022

ஆணின் ‘விந்தணு’வில் தோன்றியதா பிரபஞ்சம்!?!?!?

‘உயிர்களின் தோற்றம்’ குறித்து, மூன்று முன்னணி மதங்களும் மனம்போன போக்கில் கதை திரித்திருக்கின்றன. அவற்றைப் பதிவின் இறுதியில் வாசிக்கலாம். 


முன்னதாக, ‘பிரபஞ்ச[உயிர்கள்]த் தோற்றம்’ பற்றிப் பண்டைய எகிப்தியர்களிடையே வழங்கிய ஒரு சுவையான கதை:

#எகிப்தியப் புராணங்களின்படி முதல் எகிப்தியக் கடவுளான ஆடன் சுய இன்பத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. எனவே, சுயஇன்பம் பண்டைய எகிப்தில் புனிதமானதாகக் கருதப்பட்டது[சுய இன்பம் செய்த ஆடனுக்குக் கோயில் கட்டி விழாக்கள் எடுத்திருப்பார்களோ?!]. 

கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகப் ‘பாரோக்கள்’[?] மக்களின் முன்பு நைல் நதியில் சுயஇன்பம் செய்தனர். பாரோக்களைத் தொடர்ந்து மற்ற ஆண்களும் நைல் நதியில் சுயஇன்பம் செய்தார்கள்# 

அன்றைய எகிப்தியர் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்:

*பண்டைய எகிப்தில் திருமணச் சடங்கென்று எதுவுமில்லை. பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிவிட்டுத் தாங்கள் விரும்பும் ஆணின் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கிவிடுவார்கள். 

*விவாகரத்துச் செயல்முறை மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. தம்பதிகளில் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறினாலே இருவரும் விவாகரத்துச் செய்ததாக அர்த்தம்.

*ஆண், பெண் இருவரும் திருமணம் ஆகாதவராக இருக்கும்பட்சத்தில் திருமணத்துக்கு முந்தைய உடலுறவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல் வேண்டும். விபச்சாரம் மன்னிக்க முடியாத குற்றமாக இருந்தது. அதற்கு மரண தண்டனைகூட வழங்கப்பட்டது.

*அவர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை நம்பினர்; இறப்புக்குப் பிறகு ஆன்மாக்கள் தங்கள் உடலைத் தேடும் என்றும் நம்பினார்கள். 

எனவே, ஆன்மாக்கள் தத்தம் உடல்களை அடையாளம் காண்டுகொள்ள வசதியாக, ஒவ்வொரு மம்மியிலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினர்கள். https://tamil.boldsky.com/insync/pulse/unknown-facts-about-the-love-life-of-ancient-egyptians-in-tamil/articlecontent-pf269033-036498.html

உயிர்களின் தோற்றம்:

*கிறிஸ்தவ மதம்:

முதல் இரண்டு நாட்களில் பகல், இரவு, வானம், பூமி ஆகியவற்றையும்[பூமி படைக்கப்படுவதற்கு முன்பே நாட்களைக் கணக்கிட்டது எப்படி?!], மூன்றாம் நாளில் புல், பூண்டு, மரஞ்செடிகொடி ஆகியவற்றையும், நான்காம் நாளில் விலங்குகளையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறப்பன ஆகியவற்றையும் படைத்தார் கடவுள் என்கிறது கிறித்தவ மதம்.

ஏழாம் நாளில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

*இஸ்லாம் மதம்:

முதல் இரண்டு  நாட்கள்... நீர், காற்று, பூமி.

3ஆம் நாள்... கடல்வாழ் உயிரினம், ஊர்வன முதலானவை.

4ஆம் நாள்... ஜான் என்னும் தேவதை[?]

5, 6ஆம் நாட்களில்... முதல் மனிதன் 'ஆதாம்'; முதல் பெண் 'ஏவாள்'.

*இந்து மதம்:

பரமாத்மாவால் படைக்கப்பட்ட 'பிரஹிமா[பிரம்மா]' ஒரு பிரஹ்ம ஆண்டு[16 லட்சம் கோடி ஆண்டுகள்]வரை வாழ்ந்து மானிடர், விலங்கு, பறவை முதலான உயிரினங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் படைத்தார்.

===========================================================================