பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இவனா? இவன் நல்லவனா? இவனா நல்லவன்?!

கடவுள் ஏன் நம்மைப் படைத்து இந்த உலகில் உலவ விட்டார் என்ற வினா, சதா காலமும் நம் மண்டையைக் குடைந்து குடைந்து நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கிறது.

நமதே நமதான இந்த உடம்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனமும் இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தி, ஆசை, நேசம், பாசம், காமம், வெகுளி, பொறாமை, சூது, வாது, வஞ்சகம் போன்றவற்றிலிருந்து தற்காத்து நிம்மதியுடன் வாழ்வதற்கு எத்தனைப் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது? இப்படியொரு அவல வாழ்க்கை வாழ நம்மைப் பணித்த கடவுள் நல்லவனா?

நோய், வறுமை, முதுமை, இயற்கைப் பேரிடர் என்று எத்தனை எத்தனை அழிவுச் சக்திகள் நம்மை ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கின்றன. இப்படியொரு விடுபட முடியாத இடர்ப்பாட்டுக்கு நம்மை உட்படுத்திய இவன் நல்லவனா என்ன?

அவலத்தின் மறுபிரதி மரணம். மரணத்தைக் காட்டிலும் நம்மைத் தினம் தினம் அச்சுறுத்திச் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறது மரண பயம். மரணமே இல்லாத கடவுள் நம்மை மட்டும் மரணதுக்கும் மரண பயத்துக்கும் உள்ளாக்கலாமா? 

செத்த பிறகு என்ன ஆவோம் என்பதும் நமக்குத் தெரியாது. இந்த மர்ம முடிச்சைப் போட்டவனும் இவன்தான்; இவனேதான்.


இவன் நல்லவன் அல்ல; அல்லவே அல்ல.

நல்லவன் அல்ல என்றால், தீயவன்... தீயவனே என்பது உறுதி.

தீமையே வடிவானவனைக் கருணை வடிவானவன் என்று நம்பி வழிபடுவது அறிவுடைமையா, அறியாமையின் உச்சநிலையா?

சிந்திப்பீர்!
==============================================================================