அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 25 மார்ச், 2023

‘வன்புணர்ச்சி’... அரபு நாடுகளைப் பின்பற்றுதல் அவசரத் தேவை!!!

ர் அரசு மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர், அந்த மருத்துவமனையின் ஊழியன் ஒருவனாலேயே கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டார்[வன்புணர்வு செய்த அந்த 55 வயதான விலங்கு மனிதன், தாக்குதல், வன்புணர்ச்சி என்று பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மார்ச் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டான்].

உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் அந்தப் பேதைப் பெண்.

இப்படியொரு மாபாதகத்துக்கு  அவள் உள்ளான நிலையில், அதே அரசு மருத்துவமனையின் ஐந்து ஊழியர்கள் இணைந்து[பாதிக்கப்பட்ட பெண் தங்களின் சக ஊழியர் என்பதையும் மறந்து], அவரை இணங்க வைத்துப் புணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இந்த அவல நிகழ்வு குறித்து அறிந்த கேரள அரசு அந்த ஐந்து கயவர்களையும் பணியிலிருந்து ‘இடைநீக்கம்’ செய்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநர்(டிஎம்இ) தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார் என்பது செய்தி[© இந்தியா டுடே]

முறையான தீவிர விசாரணைக்குப் பின்னரே மருத்துவக் கல்வி இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்திருப்பார் என்பது உறுதி.

அப்புறம் எதற்குக் கைது, நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு எல்லாம்?[பிற குற்றச் செயல்களுக்கு வழக்கமான நெறிமுறைகளைப் பின்பற்றுதல் அவசியம்].

தப்பி ஓட முயன்றதாகவும், காவலர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் ஓர் அறிக்கையைத் தயார் செய்து வைத்துக்கொண்டு அவர்களைச் சுட்டுத்தள்ளுதல் வன்புணர்வு செய்வதற்கும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கும்  வழங்கப்பட வேண்டிய மிக அவசியமான தண்டனையாகும்.

குழந்தைகள் & பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், சில அரபு நாடுகளைப் போல, நாற்சந்தியில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லுதல், அந்தரங்க உறுப்புகளைத் துண்டித்தல் போன்றவையே ஏற்ற தண்டனைகள் ஆகும்.

நடுவணரசு உடனடியாக, இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உடனடித் தேவை ஆகும். 

https://www.msn.com/en-in/money/topstories/kerala-govt-suspends-five-employees-for-trying-to-influence-sexual-assault-survivor/ar-AA190m4F?ocid=msedgdhp&pc=U531&cvid=7d6616e8dadc4cfd82ae0bcae30e6515&ei=33

=======================================================================================

!!!இன்னுமொரு வன்புணர்வு நிகழ்வு. கீழேயுள்ள முகவரியைக் கிளிக்கி வாசிக்கலாம்[இது இன்றையச் செய்தி]:

https://tamil.news18.com/national/young-girl-gang-raped-by-tying-her-boyfriend-2-youths-arrested-918429.html