அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 ஏப்ரல், 2023

அதென்ன ‘செப்சிஸ்’[நடிகர் ‘சரத்பாபு’வைப் பாதித்துள்ள நோய்]?

டலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாவதுண்டு. இந்த அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி, பல உறுப்புகளின் திசுக்களைத் தாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கிவிடும். இதுவே ‘செப்சிஸ்’ நோய் எனப்படும்[Sepsis is the body's extreme response[எதிர்வினை> எதிர்ப்புச்சக்தி] to an infection. It is a life-threatening medical emergency. Sepsis happens when an infection you already have triggers a chain reaction throughout your body].

பொதுவாக, தோல், நுரையீரல், சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகள் இந்த நோய்க்குக் காரணமாக இருக்கலாம். சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும். 

நோயின் மிக முக்கிய அறிகுறிகள்:

*அதிகக் காய்ச்சலும் விரைவான சுவாசமும். 

*காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை 101 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் உயரும், அல்லது, 96.8 டிகிரி பாரன்ஹீட்டைவிடக் குறைந்து உடல் குளிர்ச்சியடையும்.


*வேகமாக மூச்சுவாங்கும். 1 நிமிடத்திற்கு 20 தடவைக்கு மேல் சுவாசிக்க நேரும்.


*இதயத் துடிப்பு 90ஐத் தாண்டும்; தாறுமாறாகவும் துடிக்கும். இரத்த அழுத்தம் குறையும்.


*மனநிலை இயல்பானதாக இல்லாமலிருக்கும்.


*ஒட்டுமொத்த உடம்பும் பலவீனமடையும்.


*உடம்பு குளிர்வது போன்ற உணர்வு உண்டாகும்.


*மூட்டுகளிலும் விரல்களிலும் ரத்தம் உறைதல் நிகழும்.


*பல உறுப்புகளின் இயல்பான இயக்கம் தடைப்படும். குறிப்பாக, இதயம், நுரையீரல், எலும்புகள், செரிமான மண்டலம், சிறுநீரகங்கள், தோல், மூளை ஆகியவை.


இவற்றில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட பாதிப்புகள் இருந்தால் அது ‘செப்சிஸ் நோயின் தொடக்க நிலை எனலாம். ஏதேனும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு குணமாகிவரும் நிலையில் இந்த நோய்த் தொற்று ஏற்படுவதும் உண்டு.


இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறவர்கள்:


*65 வயதைக் கடந்த முதியவர்கள்.


*நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள்.


*கடுமையான ரத்தக் காயங்களிலிருந்து மீண்டவர்கள்.


*கர்ப்பிணிகள்.


*மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகள்.


*சிறுநீர் வடிகுழாய், சுவாசக்குழாய் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள்.


சிகிச்சை:


செப்சிஸிற்கான காரணம் மற்றும் தீவிரத்தின் அடிப்படை நிலையைப் பொருத்து மருத்துவர் வெவ்வேறு சிகிச்சை வழிகாட்டுதல்களை & நடைமுறைகளைப் பின்பற்றுவார்கள்.


செப்சிஸிற்கான சிகிச்சையானது அதன் அடிப்படைக் காரணத்தைக் கவனத்தில் கொண்டு செய்யப்படுவது. 


*உயிர்க்காற்று[ஆக்சிஜன்] செலுத்துதல், நரம்பு வழியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குதல் மேற்கொள்ளப்படும்.


*Vasopressor மருந்துகளைப் பயன்படுத்தல்.


*கார்டிகோஸ்டீராய்டுகளைக் குறைந்த அளவுகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கக்கூடும். அவர்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் மற்றும் தற்காலிக நிவாரணத்திற்காகச் சில வலி நிவாரணிகளை வழங்குவார்கள்.


*தேவைப்பட்டால் டயாலிசிஸ் செய்யப்படும்.


*குடலிறக்கம் இருந்தால் அதற்குச் சிகிச்சை அளிக்கப்படும்.


தடுப்பு நடவடிக்கைகள்:


*நாள் தவறாமல் குளித்தல். அவ்வப்போது சோப்பு நீரால் கைகளைக் கழுவுதல்.


*நிமோனியா, காய்ச்சல், சின்னம்மை, மற்றும் பிற நோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளுதல்.


*உடம்பில் ஏற்படும் காயங்களுக்கு உடனடியாகச் சிகிச்சை செய்தல்.


*ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டாலும் காயத்தைச் சுத்தம் செய்வதற்கும், சரிசெய்வதற்கும் முறையான கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல்.


*மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் எடுத்துக்கொள்ளுதல் கூடாது. ஏனெனில், இது ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இதனால் கடுமையான தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பது கடினம்.

எச்சரிக்கை:

நோய் குணமாகும்வரை 24 மணி நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிக அவசியம்.


மீண்டும் தொற்றுகள்[மேலே குறிப்பிடப்பட்டவை] ஏற்பட்டால், அது செப்சிஸாக மாறும் வாய்ப்பு உள்ளது.

இந்த நோய் பெரியவர்களைவிடவும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.


குறிப்பு: இணையங்களில் வெளியாகும் மருத்துவக் கட்டுரைகளில் பலவும் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்படுவை என்பதால், அவற்றில் மொழிப் பிழையும், குழப்பமான நடையும் இடம்பெறுதலைக் காணலாம்.
இயன்றவரை அவற்றைச் சரிசெய்து வெளியிடுகிறேன். எனவே, பிழைகள் தென்பட்டால் திருத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.