அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 27 ஏப்ரல், 2023

இவன் ‘பாதிரி’யா, மனித உயிர் பறிக்கும் கொலைகாரப் பாவியா!?!?

‘கென்யா’ நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது ‘மாலிண்டி’ என்னும் நகரம்.

இங்கு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்' என்னும் பெயரில் தேவாலயம்[800 ஏக்கர் பரப்புளவுள்ள பண்ணையில்] உள்ளது. இதன் தலைமைப் பாதிரியாராக இருப்பவர் ‘பால் மெக்கன்சி’. 


மற்றப் பாதிரியார்களின் போதனை எவ்வாறிருப்பினும், இவர் தன்னைப் பின்பற்றும் மக்களிடம், “உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவைப் பார்க்கலாம்” என்று தொடர்ந்து போதனை செய்துள்ளார். மிகப் பல முட்டாள்கள் பட்டினி கிடந்து செத்தொழிந்திருக்கிறார்கள்.

 

அண்மைத் தகவல்களின்படி, 90 பிணங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன[பெண்கள், சிறுவர்கள் உட்பட்]. சுமார் 213 பேர் காணாமல்போயிருக்கிறார்கள்.  உடல் மெலிந்து, காவலரின் பிடியில் சிக்காமலிருக்க  அருகிலுள்ள காடுகளில் பலர் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள்.



பாதிரி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிகழ்ச்சி, மூடநம்பிக்கை வளர்ப்பில், இந்துச் சாமியார்களைக் கிறித்துவச் சாமியார்கள் மிஞ்சிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது.


“பாதிரியே, நீ முதலில் உண்ணாவிரதம் இருந்து ஏசுவைக் காண்பதற்கான பயணத்தை மேற்கொள். நாங்களும் பட்டினி கிடந்து ஏசுநாதரைக் காண உன் பின்னால் அணிவகுக்கிறோம்” என்று சொல்லும் அறிவு அங்குள்ளவர்களுக்கு இல்லை.


பலநூறு பேரின் உயிரைப் பறித்த இந்த மாபாதகனுக்கு ‘கென்யா’ தேசம் என்ன தண்டனை வழங்கப்போகிறது?


தண்டனை வழங்குமா, அல்லது, கட்டிய பெண்டாட்டியைக் கொன்று புதைத்துவிட்டு, மகாசமாதி அடைந்துவிட்டதாகப் புளுகித் திரிகிறவனையெல்லாம் இங்கே மகான் ஆக்கிக் கொண்டாடுவது போல், கொலைகாரப் பாதிரியையும் அந்த நாட்டு அரசு விடுதலை செய்து கொண்டாடுமா?!


கென்யாவில் கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலிகளேனும் உள்ளார்களா இல்லையா என்பது வரும் நாட்களில் தெரியக்கூடும்! 


https://www.dailythanthi.com/News/World/kenya-cult-deaths-hits-90-as-authorities-expand-operation-951772?infinitescroll=1