அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 26 ஏப்ரல், 2023

ஆடவருக்குச் சேவை செய்ய ஆண்டவன் அனுப்பிய ஆபாசப் பட நடிகை!!!

"பாலியல் இன்பத்தை அனுபவிக்கவே நன் பிறந்தேன்” என்று விரிந்து பரந்த இந்த உலகில் ஓர் அழகிய இளம் பெண் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

“இல்லை” என்பதே உங்களின் பதிலாக இருக்கும்.

“எந்தவொரு ஆண்மகனும்கூட இப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை. ஆணோ பெண்ணோ ‘இன்பம் துய்க்கப் பிறந்தேன்’ என்று சொன்னால் அதில் தவறேதும் இல்லை. இப்படி ஒரு பெண், குறிப்பாகக் குடும்பப் பெண் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை” என்பது உங்கள் பதிலின் விரிவாக்கமாக இருக்கலாம்.

உங்களின் பதில் மிகச் சரியானதே. இதைச் சொன்னவள் குடும்பப் பெண் அல்ல; பிரபலமான ஆபாசப் பட நடிகை[அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ‘கர்ட்னி தில்லியா’]  என்பது ஊடகச் செய்தி.

“இதை ஒரு சேவையாகவே நான் கருதுகிறேன். இதற்காகவே கடவுள் இந்த உலகுக்கு என்னை அனுப்பியுள்ளார்” என்றும் அவள் மனம் திறந்திருக்கிறாள்[“எல்லாம் கடவுளின் செயலே என்னும்போது, என்னை இப்படியான ஆபாச நடிகை ஆக்கியதும் அவருடைய கைங்கரியமே” என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கலாம்].

இந்த அவளின் பேச்சு, தன்னலம் கருதாது மக்களுக்குச் சேவை செய்பவர்களை மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும்.

ஆபாசப் படத் தயாரிப்பாளர்களால் சற்றே புறக்கணிக்கப்பட்ட நிலையில்[4 குழந்தைகளுத் தாயான இவளால் எப்படி இந்தச் சதை வணிகத்தில் கோலோச்ச முடிந்தது என்று நம்மால் வியக்காமல் இருக்க இயலவில்லை] மன நிலை பாதிக்கப்பட்டு இப்படிப் பேசியிருக்கவும் வாய்ப்புள்ளது.

எது எப்படியோ, ஒரு நீலப்பட நடிகை இப்படிச் சொல்லியிருப்பது மனித நாகரிகத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

இதை ஒரு செய்தியாக்கி, வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வருமானம் பண்ண முயலும் ஊடகக்காரர்களின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.