எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 16 மே, 2023

‘நீட்’ தேர்வு... நன்மை தீமைகள்!

[!!!‘ஒரு தரமான பதிவும்[Quora] பகிர்வும்’ என்னும் தலைப்பில் ஏற்கனவே வெளியான பதிவு, தற்செயலாக நேர்ந்த பிழை காரணமாக அழிந்துவிட்டது{delete ஆன இடுகையை, சற்று முன்னர் முயற்சி செய்ததில் மீட்டெடுப்பது சாத்தியமானது என்பதைத் தெரிவிக்கிறேன். வரைவில்-draft-இல் உள்ளது}. வருகையாளர் நலன் கருதி, அதே உள்ளடக்கத்துடன், இப்பதிவு[’நீட்’ தேர்வு... நன்மை தீமைகள்] வெளியிடப்படுகிறது].

நன்மைகள்:

*கல்லூரியில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தேவை. முழுமையாகப் பணத்தைக் கொண்டு சேர முடியாது

*15%‌ AIQ (all india quota) - மதிப்பெண் இருந்தால் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் படிக்கலாம்.

*நீட் மற்ற அரசுத் தேர்வுகள் போல் இருப்பதால் பின்னாளில் பயன்படலாம்.

*பாடங்கள் — ஒரே தேர்வு ஒரே தாள்.

*விண்ணப்பிப்பது எளிது. பள்ளி பொதுத் தேர்வுக்கு தனியாக விண்ணப்பித்து தேர்வு எழுதுவதைத் காட்டிலும்.

*மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்து வெற்றி பெற இயலாது . வேதியியல் , இயற்பியல் இரண்டிலும் புரிதல் வேண்டும்.

*கணினி மூலம் தேர்வுத்தாள் திருத்தப்பட்டு வந்தால் MCQ கேள்விகளுக்கான பதில் சரி/ தவறு இரண்டுதான் . 1 மதிப்பெண் கூடத் திருத்துபவரைப் பொருத்து மாறாது .

தீமைகள்:

*பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடித்தல்.

*பயிற்சி வகுப்பின்றி வெற்றி பெற முடியாது என்று மாணவர்கள் நினைத்தல்.

*பள்ளித் தேர்வுகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் நீட்டில் மட்டும் கவனம் செலுத்துதல்.

*மாணவர்களின் பயம். பெற்றோர்களின் கவலை.

*இதற்காக 1–3 ஆண்டுகள் படித்துப் பின் தேர்வெழுதி, கல்லூரியில் சேர்ந்தால் படிப்பு முடியத் தாமதம் ஆகும் .

*****‘மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுதல்’ -இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்பது ‘பசி’பரமசிவத்தின் தனிப்பட்ட விருப்பம்.


* * * * *

நன்றி: காவியஸ்ரீ சண்முகம்