புதன், 17 மே, 2023

லஞ்சப் பணப் பகிர்வும் வஞ்சிக்கப்பட்ட ‘பாஜக’வும்!!!

சேலம், ஏற்காடு ஊராட்சிக்குச் சொந்தமான 20[23?] கடைகள் ஏலம் விடப்பட்டன.

அதற்கான விதிமுறைகளில் தில்லுமுல்லு செய்து, ஒரு கடைக்கு ரூ1.75 லட்சம் வீதம் 70கடைகளுக்கும் 32 லட்சம் பெறப்பட்டது[கடந்த 2021இல், 13 கடைகளுக்கு 30 லட்சம் - மாலைமலர்].

இச்செய்தி, இன்று காலை 9.30 மணிக்கு ‘News தமிழ்’ தொ.கா.வில் வெளியானது.

லஞ்சமாகப் பெற்ற பணத்திலிருந்து, ‘திமுக’வுக்கு 5 லட்சம், ‘அதிமுக’வுக்கு 4 லட்சம், ‘தேமுதிக’வுக்கு 1 லட்சம், ‘பாஜக’வுக்கு ரூ50,000 கையூட்டாக[லஞ்சம்]பகிர்ந்துகொள்ளப்பட்டது[ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கும் பகிரப்பட்டது].

பகிர்ந்தளித்தவர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராஜா ஆவார்.

இம்மாதிரி, ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்யும்போது, கட்சிக்காரர்கள் அரசு அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழல் புரிவது வழக்கமாக நடைபெறுகிற ஒன்று என்பதால் இது குறித்துக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.

நம் வருத்தமெல்லாம், லஞ்சப் பணத்தைப் பங்கிடுவதில், நாட்டை ஆளும் பெரியதொரு கட்சி]பாஜக] 4ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, வெறும் ரூ50,000 மட்டுமே லஞ்சப் பணம் தரப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான்.

இது விசயம் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களுக்குத் தெரியாமலிருந்தால் தெரியப்படுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம் ஆகும்.

இனியும், மேற்கண்ட கட்சிகளுக்கிடையே ‘பஞ்சப் பகிர்வு’ செய்திட நேருமாயின், ‘திமுக’ உள்ளிட்ட கட்சிகள் பெறும் பங்கைவிடவும் ‘பாஜக’வுக்கு ஒரு ரூபாயேனும் அதிகம் வழங்கப்படுவது அவசியம்.

அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில் அண்ணாமலை அவர்கள் முனைப்புக் காட்டுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

‘திமுக’ தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு உடன்பட மறுப்பாரேயானால், புதிய புதிய ஆடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு, திமுகவின் உட்கட்சிப் பூசலையும், அடிக்கும் கொள்ளைகளையும் அம்பலப்படுத்தினால், ஸ்டாலின் வழிக்கு வருவார் என்பது நிச்சயம்.

அண்ணாமலை அவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது நாம் முன்வைக்கும் பரிந்துரை.

அரசியல் செய்வதில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், லஞ்சம் வாங்குவதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, லஞ்சப் பணத்தைப் பகிர்வதில் கட்சிக்காரர்கள் கடைப்பிடிக்கும் நேர்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!

லஞ்சம் பங்கீடு... காணொலி: