அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 30 மே, 2023

மதங்களை ஆளும் சாதிகள்! கிறித்தவமும் விதிவிலக்கல்ல!!

கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள செயின்ட் மேரி மாக்டலின் தேவாலயம் கும்பகோணம் கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்தது.

இக்கிராமத்தில் சுமார் 540 தலித் கிறிஸ்தவக் குடும்பத்தினரும், 100 ஆதிக்கச் சாதிக் கத்தோலிக்கர் குடும்பத்தினரும் வாழ்கின்றனர்.

இரு தரப்பாருமே கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது நினைவுகூரத்தக்கது. ஆயினும் என்ன, இங்குள்ள ஆதிக்கக் கத்தோலிக்கர்களின் சாதி வெறியைக் கிறித்தவ மதம் தணிக்கவோ அழிக்கவோ செய்யவில்லை என்பதற்கு இவர்களுக்குள்ளே நிலவும் ஏற்றத்தாழ்வுகளே சான்று.

ஏற்றத்தாழ்வுகள் குறித்து, மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த தலித் கிறித்தவர்களான ஜே தாஸ் பிரகாஷ், ஏ பவுல்டாஸ், ராஜ் நோபிலி ஆகியோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு பின்வருமாறு:

“தேவாலயத்தில் உள்ள சபைக்கு[council] ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேவாலயத்துக்கான சந்தாவோ நிதியுதவியோ செலுத்தவும் தலித் கிறித்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.”


ஆயினும், மேலாதிக்கக் கத்தோலிக்கர்களின் கிராமத் தலைவர் ஏ கண்ணன் என்பவர், “அனைத்துச் சாதிக் கத்தோலிக்கர்களும் சகோதர சகோதரிகளாக வாழ்கிறார்கள்” என்றும், “அவர்களுக்குள் எந்தவிதப் பாகுபாடும் இல்லை” என்றும் கூறுகிறாராம்The Times of India16h ago

உண்மை நிலவரம் என்ன என்பதை, இவர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுகொள்ளாத கர்த்தரே அறிவார்!


ஹி...ஹி...ஹி!!!


* * * * *

[https://www.msn.com/en-in/news/other/dalit-christians-in-tamil-nadu-village-allege-church-discrimination/ar-AA1bQPXJ?ocid=msedgdhp&pc=U531&cvid=c906bf9be3bf4368a56603a8316db096&ei=8]