எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 30 மே, 2023

மதங்களை ஆளும் சாதிகள்! கிறித்தவமும் விதிவிலக்கல்ல!!

கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள செயின்ட் மேரி மாக்டலின் தேவாலயம் கும்பகோணம் கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்தது.

இக்கிராமத்தில் சுமார் 540 தலித் கிறிஸ்தவக் குடும்பத்தினரும், 100 ஆதிக்கச் சாதிக் கத்தோலிக்கர் குடும்பத்தினரும் வாழ்கின்றனர்.

இரு தரப்பாருமே கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது நினைவுகூரத்தக்கது. ஆயினும் என்ன, இங்குள்ள ஆதிக்கக் கத்தோலிக்கர்களின் சாதி வெறியைக் கிறித்தவ மதம் தணிக்கவோ அழிக்கவோ செய்யவில்லை என்பதற்கு இவர்களுக்குள்ளே நிலவும் ஏற்றத்தாழ்வுகளே சான்று.

ஏற்றத்தாழ்வுகள் குறித்து, மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த தலித் கிறித்தவர்களான ஜே தாஸ் பிரகாஷ், ஏ பவுல்டாஸ், ராஜ் நோபிலி ஆகியோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு பின்வருமாறு:

“தேவாலயத்தில் உள்ள சபைக்கு[council] ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேவாலயத்துக்கான சந்தாவோ நிதியுதவியோ செலுத்தவும் தலித் கிறித்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.”


ஆயினும், மேலாதிக்கக் கத்தோலிக்கர்களின் கிராமத் தலைவர் ஏ கண்ணன் என்பவர், “அனைத்துச் சாதிக் கத்தோலிக்கர்களும் சகோதர சகோதரிகளாக வாழ்கிறார்கள்” என்றும், “அவர்களுக்குள் எந்தவிதப் பாகுபாடும் இல்லை” என்றும் கூறுகிறாராம்The Times of India16h ago

உண்மை நிலவரம் என்ன என்பதை, இவர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுகொள்ளாத கர்த்தரே அறிவார்!


ஹி...ஹி...ஹி!!!


* * * * *

[https://www.msn.com/en-in/news/other/dalit-christians-in-tamil-nadu-village-allege-church-discrimination/ar-AA1bQPXJ?ocid=msedgdhp&pc=U531&cvid=c906bf9be3bf4368a56603a8316db096&ei=8]