பக்கங்கள்

வெள்ளி, 21 ஜூலை, 2023

வாழ்க ‘மெய்தி’[மணிப்பூர்] இனப் பெண்கள்! வெல்க பெண்ணினம்!!

ங்கள் இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தியிருக்கிறார்கள்[https://www.hindutamil.in/news/].

பழங்குடிப் பெண்கள்[ஆண்கள் உட்பட] தங்கள் இனத்துப் பெண்களின் மானத்தையும் கவுரவத்தையும் கட்டிக்காத்திட, ஒன்றுதிரண்டு போராடிய செயல் பாராட்டுக்குறியது.

"குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை கிடைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்ற மணிப்பூர் முதல்வரின் மனப்பூர்வமான அறிவிப்பு பெரிதும் வரவேற்கத்தது.

இவற்றைவிடவும்,

“ஹேராதாசின்[32 வயது] செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தைத் தேடித் தந்துள்ளது” என்று சாடியதோடு, மெய்தி இனத்தவனான அவனின் வீட்டை, அவனின் இனத்தைச் சார்ந்த ‘மெய்தி’ இனப் பெண்களே அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருப்பது[https://www.dailythanthi.com/] கட்டுக்கடங்காத பெரும் வேதனைக்கிடையே ஆறுதல் அளிக்கும் செயலாகும்.

ஜாதி மத இனக் கலவரங்களின்போதெல்லாம் பெண்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது, வன்புணர்வு செய்து கொல்லப்படுவது போன்ற கொடூரக் குற்றங்கள் அவ்வப்போது நிகழ்தன; நிகழ்ந்துகொண்டுள்ளன.

இதையே வேறொரு கோணத்தில் சிந்தித்தால், ஒட்டுமொத்த[பெரும்பாலான?] ஆண்களும் ஒட்டுமொத்தப் பெண் இனத்தைப் போகப் பொருளாகக் கருதும் வக்கிரக் குணம் கொண்டவர்களே என்பது புரியும்.

காலங்காலமாய்த் தங்களுக்கு நேரும் இந்த அவலத்தைக் களைந்தெறியப் பெண்ணினம் இணைந்து போராடுவது அவசியமாகும்.

பெண்கள் இதை உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதை, மெய்தி இனப் பெண்களே மெய்தி இனத்தைச் சேர்ந்த கயவனின் வீட்டை அடித்து நொறுக்கித் தீ வைத்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

மெய்தி இனப் பெண்களின் உயர் குணத்தைப் போற்றுவது பெண்ணினத்தின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.

* * * * *

https://www.hindutamil.in/news/india/1059513-manipur-violence-tribal-protest-rally-against-humiliation-of-women-1.html

https://www.dailythanthi.com/News/India/manipur-brutality-meithi-women-who-smashed-the-house-of-the-criminal-1012651?infinitescroll=1


                                        *   *   *   *   *

***//தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “மணிப்பூர் விவகாரம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா இதுகுறித்து ‘ட்வீட்’ செய்துள்ளார்.

மனிதாபிமானமுள்ள மக்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாம் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” // https://news7tamil.live/we-should-bow-our-heads-in-shame-khushbu-condemns-the-manipur-video-issue.html