பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 22 ஜூலை, 2023

புரிந்த கேள்விகள்! புரியாத பதில்கள்!!


“அண்டவெளியும் அதிலுள்ள பொருள்களும் உயிர்களும் பிறவும்[?] தோன்றியது எப்படி?” -இது கேள்வி.

“அனைத்தும் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவை” என்பது கடவுள் நம்பிக்கையாளர்கள் தரும் ஒரு பதில்.

“தோற்றுவித்தவர் கடவுள் என்றால், அவரைத் தோற்றுவித்தவர் யார்?” -இது இரண்டாவது கேள்வி.

“அவரை எவரும் தோற்றுவிக்கவில்லை.” -இது 2ஆவது கேள்விக்கான பதில்.

“தோற்றுவிக்கப்படாமல் எந்த ஒன்றும் ‘இருப்பது’ சாத்தியமில்லை. கடவுளின் ‘இருப்பு’ மட்டும் எப்படிச் சாத்தியமாயிற்று?” -இது மூன்றாவது கேள்வி.

“அவர் இருந்துகொண்டே இருப்பவர்.” -இது மூன்றாவதற்கான பதில்.

“இது மட்டும் எப்படிச் சாத்தியமாயிற்று?” -4ஆவது கேள்வி.

“....................” -பதில் தெரிந்தவர் இல்லை.

பதில் தெரியாத கேள்விகளுக்கு, “தெரியவில்லை” என்று சொல்வது உயர் பண்பு; நேர்மைக் குணம்.

பதில் தெரியாத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, பதில் அறியும் முயற்சியை மேற்கொண்டால், விடைகள் கிடைப்பது சாத்தியம் இல்லாமல்போயினும் மனிதருக்கான சிந்திக்கும் அறிவு வளரும் என்பது உறுதி.

கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சொல்லி மக்களிடையே கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கைகளையும் திணிக்கும் ஆன்மிகர்களும் அவதாரங்களும் இதைப் புரிந்துகொள்வது நல்லது.

அது நம் மக்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும் என்பது உறுதி.

                              *   *   *   *   *
***பதிவுகளுக்குள்[ஆங்காங்கே] இடம்பெற்ற, ‘கடவுள்’ குறித்த கருத்துகள், அவற்றின் முக்கியத்துவம் கருதி இங்கே தொகுத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன.