அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 19 அக்டோபர், 2023

ஏனுங்க, அதென்னங்க ‘அல்லேலூயா’?[பொழுதுபோக்கு]

கிறித்தவர்களும் இஸ்லாமியரும் பிரார்த்தனையை முடிக்கும்போது, “ஆமென்”[கிறித்தவர்] என்றும், “ஆமீன்”[இஸ்லாமியர்] என்றும் பயபக்தியுடன் சொல்லுகிறார்கள்.

இவற்றிற்கு, ‘அப்படியே ஆகட்டும்’ என்று பொருள்[கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களில் இறுதிச் சொல்லாகப் பாவிக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் மகிழ்ச்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது].

‘ஆமென்’ மட்டுமல்லாமல் ‘அல்லேலூயா’ என்னும் சொல், கிறித்தவர்களால் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக.....

கீழ்வருவது போன்ற பாடல்களில் இச்சொல் இடம்பெற்றுள்ளது.

அல்லேலூயா அல்லேலூயா

நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம்பிதாவுக்கு அல்லேலூயா

ஆவியானவர்க்கு அல்லேலூயா

தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களிகூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே

தோல்வியில்லை துதிகளினாலே
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே

இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா
ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே

பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே                           

https://tamilchristiansongs.in/tamil/lyrics/halleluiah-halleluiah-nam-yesuvukku/

                                *   *   *   *   *

‘அல்லேலூயா’ என்னும் இச்சொல் நம்மை வெகுவாகக் கவர்ந்தது; இது உணர்த்தும் பொருளை அறிந்திட வேண்டும் என்னும் ஆர்வமும் உண்டாயிற்று.


வலைதளங்களில் தேடியதில் இதற்கான விளக்கம் கிடைத்தது.

//அல்லேலூயா என்பது, அல்லேலு யா(Allelu iah) என்னும் இரண்டு சொற்களின் இணைப்பாகும்.

இது அரேபியச் சொல். துதி, அல்லது, மகிமை உண்டாவதாக என்று பொருள்.

அடுத்த எழுத்து ‘யா’ கர்த்தரைக் குறிக்கும். https://www.facebook.com/Dailymyprayer/posts/1719406688301478/


//அல்லேலூயா, அல்லேலூயா கர்த்தாவே உமக்கு

அல்லேலூயா//

-இது இன்னொரு பாடலின் தொடக்க வரி[https://dhyanamalar.org/hymns-spiritual-songs/]

‘அல்லேலூயா’வின் பொருள் ‘மகிமை உண்டாகட்டும்’[ஏற்புடைய தெளிவான விளக்கம் அல்ல இது. பிறமொழிச் சொல் என்பதாலோ?] என்கிறார்கள்.

கர்த்தரைத் துதிபாடுவதும், தமக்குள்ள குறைகளைத் தீர்க்கும்படி அவரை வேண்டுவதும் வரவேற்கத்தக்கதே.

எதற்கு இந்த ‘அல்லேலூயா’? “ஏசுவுக்கும் பிதாவுக்கும் மகிமை உண்டாகட்டும்” என்று அற்ப மனிதர்கள் பாடுவது சரியா?

சரியோ தவறோ, ‘அல்லேலூயா’ பெரிதும் மனம் கவரும் சொல்லாக இருப்பதால்.....

“முக்கண்ணனே போற்றி! தும்பிக்கை நாயகனே போற்றி! கண்ணபிரானே போற்றி! ஏழுமலையானே போற்றி!” என்று துதிபாடும் இந்துமத அன்பர்கள்[இஸ்லாமியர்? ஊஹூம்...], முடிவில், “அல்லேலூயா” சொல்லலாம்! கிறித்தவர்கள் பெறும் பலன்களை இவர்களும் பெறலாம்!

ஹி... ஹி... ஹி!!!