அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 30 அக்டோபர், 2023

மதங்களும் ‘மார்ட்டின்’களும்!!!

டொமினிக் மார்ட்டின்தங்கள் பல.

க்களின் மன நலம் காப்பதற்காகவே[கடவுளை வழிபட்டோ படாமலோ] தோற்றுவிக்கப்பட்டவை மதங்கள்.

காலப்போக்கில், தத்தம் மதக் கொள்கைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளாத பெரும்பான்மையினரால் அவை ஆக்கிரமிக்கப்பட்டன.

அவர்களில் பலரும் மூடர்களாக[மக்கள் மனங்களில் ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்தவர்கள்] இருந்ததோடு, சுயநலவாதிகளாகவும் இருந்தததால் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றார்கள்.

அது, தங்களின் மதம் தழுவியோர் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்பட்டது.

இதில் கடும் போட்டி நிலவியதால்தான் மதங்களுக்கிடையே மோதல்களும் கலவரங்களும் வெடித்தன.

அவ்வப்போது நிகழ்ந்த கலவரங்களால் அளவிடற்கரிய பொருட்சேதங்களும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

ஆக, சுயநலம் மிக்க மதவாதிகளால் மனித இனத்துக்கு உண்டான நன்மைகளைக் காட்டிலும் அதிக அளவில் தீமைகள் விளைந்தன எனின், அதில் தவறேதும் இல்லை.

அவற்றில் ஒன்றுதான் அண்மையில் மதப் பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட, சில உயிரிழப்புகளுக்கும், படுகாயங்களுக்கும் காரணமான குண்டுவெடிப்பு.

//கொச்சி அருகே களமச்சேரியில் ‘யாகோவாவின் சாட்சிகள்’ கிறிஸ்தவ அமைப்பின்[ஒரு பிரிவு] சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோதே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், மாலையில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் இறந்தார். இந்நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுச் சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்//[ஊடகச் செய்தி].

* * * * *

குண்டு வெடிப்புக்குக் காரணமான, ‘டொமினிக் மார்ட்டின்’ பல ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தவர்; இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அவர் 16 ஆண்டுகள் ‘யாகோவாவின் சாட்சிகள்’இல் உறுப்பினராக இருந்த மதப்பற்றாளர்; உள்ளூர் மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியைச் செய்துகொண்டிருந்தவர்; உதவும் மனம் கொண்ட மிக நல்ல மனிதர்.

தான் சார்ந்திருந்த மதம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில், உயிர்ச்சேதங்கள், பக்தர்களின் உறுப்புச் சிதைவுகள் பற்றியெல்லாம் சிந்திக்க மறந்து, குலைநடுங்கச் செய்யும் கொடூர நிகழ்வுக்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார் என்பது மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது.

தன் தாய் மதத்தவரையே தாக்கிக் கதறி அழவைத்துக் கடும் துயருக்குள்ளாக்கிய மார்ட்டினின் செயல், மனிதாபிமானம் உள்ள அனைவரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது மட்டுமல்ல, வெகு அபூர்வமானதும்கூட.

தேச விரோத நடவடிக்கைகளின் ‘யாகோவாவின் சாட்சிகள்’[கிறித்தவ மதப் பிரிவு] ஈடுபட்டது என்பது[உண்மையோ பொய்யோ] அவரின் குற்றச்சாட்டு.

எவ்வகையான தேச விரோத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதை, மார்ட்டின் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவாரேயானால், அது வரவேற்கத்தக்கது[அவர்கள் நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகச் செய்துவந்த பிற குற்றச் செயல்களைக் காவல்துறை விசாரித்தறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அது உதவும் என்பது உறுதி].

இந்தவொரு மார்ட்டினைப் போல, பிற முன்னணி மதம் தழுவிய, வேறு வேறு பெயர்கள் கொண்ட மார்ட்டின்கள் தோன்றி, வேறு வேறு பெயர்களில் இயங்கும் ‘யாகோவாவின் சாட்சிகள்’ போன்ற மதம் & மதப் பிரிவுகளின், நாட்டுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரான செயல்பாடுகள் குறித்து அம்பலப்படுத்துதல் வேண்டும்[குண்டுவெடிப்புகள் கூடாது] என்பது நம் எதிர்பார்ப்பு! பெரு விருப்பம்!!