எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 31 அக்டோபர், 2023

'ஹமாஸ்’ கயவர்கள் கொஞ்சம் நல்லவர்களும்கூட!!!

பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய முதல் தாக்குதலில்[07.10.2023]  சுமார் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு, பலர் பிணைக்கைதிகளாக ஹமாஸர்களால் சிறை பிடிக்கப்பட்ட நிலையில், சிறைப்பட்டவர்களலில் ஒருவரான ‘ஷானி லவுக்’(30) என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணை நிர்வாணமாக்கி, அவளின் உடல் மீது[அவளைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவளின் தாய் வேண்டியபோது, ‘அவள் கொல்லப்படவில்லை; மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்’ என்பது ஹமாஸியர் அறிவிப்பு] எச்சில் துப்பியும், அதைக் காலால் மிதித்தும் இழிவுபடுத்தியவாறு டிரக்கில் கொண்டுசெல்லப்படும் காணொலி உலகெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது.

நிர்வாணக் கோலத்தில், அந்தப் பெண்ணை வன்புணர்வு செய்ததோடு எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்களோ[டிரக்கில் கொண்டுசென்றபோது, பெண்ணின் பிறப்புறுப்பின் மீது ஹமாஸ் காலியின் கால் அழுத்திக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. பின்னர் அந்த வீடியோ அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது] என்று அவளைப் பெற்ற அன்னை மட்டுமல்லாமல் அகில உலகமே மனம் பதறியது; பெரும் வேதனக்குள்ளானது.

பெண்ணின் நிலை குறித்து ஏதும் அறியப்படாத நிலையில், பதற்றமும் வேதனையும் சிறிதளவும் குறையாமலிருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்..... 

அண்மையில் அவர்கள் கண்டெடுத்த மண்டை ஓடு ஒன்றின் மரபணுவைச் சோதித்தபோது, அது ஷானியின் மண்டை ஓடு என்று உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். https://www.hindutamil.in/news/world/1146818-german-woman-killed-in-attack-by-hamas-terrorists-israel-army-announcement.html

இதன் மூலம், ‘ஷானி லவுக்’ உயிரோடு இல்லை என்று அறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஷானியின் உறவினர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்தச் செய்தி, ஹமாஸ் கயவர்கள் ‘ஷானி லவுக்’கை உயிரோடு அடைத்து வைத்துத் தொடர்ந்து வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்துகிறார்களோ என்றெண்ணி, அவளின் தாயும் சொந்தபந்தங்களும் அனுபவித்த துயரத்தின் அளவைக் கணிசமான அளவு குறைத்திருக்கும் என்று ஆறுதல் அடையலாம்.

அடாத செயலில் ஈடுபட்ட ஹமாஸ் கயவர்கள், ‘ஷானி லவுக்’கைத் தொடர்ந்து வன்புணர்வு செய்து துன்புறுத்தாமல், அவளைக் கொன்றதன் மூலம், “அவர்கள் கொஞ்சம் நல்லவர்களும்கூட” என்று சொல்லத் தோன்றுகிறது.