எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 6 டிசம்பர், 2023

மோடி[பிரதமர்] இங்கே! கடவுள் எங்கே... எங்கே... எங்கே?!

 

செல்லும் இடமெல்லாம் பெரிய மனிதர்களுக்குச் கறுப்புச் சட்டைப் பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள்.

அவர்களின் துணை இல்லாமல் நிம்மதியாக வீட்டில் உண்ணவும் உறங்கவும்கூட முடிவதில்லை.

வினாடிப் பொழுதுகூட அவர்கள் தன்னிச்சையாய்த் தனித்து இயங்குவது சாத்தியமே இல்லை.

வேடிக்கை என்னவென்றால், காலமெல்லாம் பக்தி நெறி பரப்பும் பரிசுத்தப் பக்திமான்களான அவர்கள் கோயிலுக்குச் சென்று அவரை வழிபடும்போதுகூட, கண்ணுங்கருத்துமாகச் சட்டைக்குள் கைத்துப்பாக்கியுடன் அவர்கள் காவல்புரிகிறார்கள். இது ஏன்?

கடவுள் என்ன செய்கிறார்?

என்னதான் செய்துகொண்டிருக்கிறார்!?

*   *   *   *   *