எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 10 ஜனவரி, 2024

அடேங்கப்பா!..... கோயில் மணிக்கு ரூ25 லட்சம்! கதவுகளுக்கு 100 கிலோ தங்கம்!!

அயோத்தி ராமர் கோயில்: ரூ.25 லட்சத்தில் மணி; 100 கிலோ தங்கத்தில் 42 கதவுகள்![https://www.vikatan.com/spiritual/temples/42-golden-doors-are-to-be-installed-in-the-ram-temple-in-ayodhya]

ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வங்கி இருப்பு ரூ.3 ஆயிரம் கோடியாக உள்ளது என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைச் செயலாளர் சம்பத்ராய் தெரிவித்தார்[https://m.dinamalar.com/detail.php?id=3452223].

“ஒரு கற்பனைக் கதையின்[ராமாயணம்] கதாநாயகனுக்குக் கோயில் கட்ட கோடி கோடி ரூபாய் செலவா?” என்று மனம் கொந்தளித்து கூக்குரல் எழுப்பவில்லை நாம்.

இந்தியா ‘வளரும் நாடுகள்’ பட்டியலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த மிக மிக மிகப் பெரும் தொகையை, இந்த நாட்டை ‘வளர்ந்த நாடுகள்’ பட்டியலில் சேர்க்கச் செலவழிக்கலாமே என்று அறிவுரை வழங்கவில்லை; அதற்கான தகுதியும் நமக்கு இல்லை.

ஆனாலும்,

இது தொடர்பாகக் கேள்வி எழுப்பும் தகுதியும் உரிமையும் நமக்கு உண்டு என்பது நம் அசைக்க இயலாத நம்பிக்கை.

கேள்விகள்.....

கோடி கோடி என்ன, மில்லியன் கணக்கிலோ பில்லியன் கணக்கிலோ ரூபாய் செலவு செய்தேனும் ராமபிரானுக்குக் கட்டப்படும் ஆடம்பரக் கோயிலை மெய் மறந்து, நேரமும் காலமும் மறந்து கண்டு கண்டு கண்டு ரசிக்கலாம்.

உலகம் வியக்கும் இந்த அதி ஆடம்பரக் கோயிலின் கட்டுமானத்தை எண்ணி எண்ணிப் பெருமிதத்தில் மிதக்கலாம்.

இவற்றாலெல்லாம்.....

பக்தி வளருமா? மக்களின் வாழ்க்கைத்தரம் உயருமா?!