அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 12 ஜனவரி, 2024

இந்தி... இந்தி... இந்தி... இந்தியே[+சமஸ்கிருதம்] இந்திய அரசின் உயிமூச்சு!!!

கேரளாவில் "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என்னும் பெயரில் ‘மருத்துவ மையங்கள்’ இயங்குகின்றன. இந்த மையங்களுக்கான செலவினங்களில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்வது வழக்கம்.

இந்த வழக்கத்திற்கு மாறாக, மையங்களுக்கு, "ஜன் ஆரோக்கிய கேந்திரம்" என்று கேரள அரசு சூட்டியுள்ள பெயரை, "ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்" என்று மாற்றும்படி கேரள அதற்கு உத்தரவிட்டது ஒன்றிய அரசு. அதைச் செயல்படுத்த மறுத்தது கடவுள் தேச அரசு.

விளைவு…..


தன் பங்கான 60% தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறதாம் இந்திய அரசு.[https://www.maalaimalar.com/news/national/centre-denies-funds-as-state-refuses-renaming-health-centres-697956].


ஒன்றிய அரசின் இந்த அற்பத்தனமான செயல்பாட்டைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.

ஒன்றிய அரசின் இந்த ஆணவப் போக்கை இனியும் எதிர்த்துப் போராடும் கேரள அரசு என்று நம்பலாம்.

இந்நிலையில்.....


நடுவணரசின் இழிசெயலை[இந்தியும், புரியாத செத்த மொழி சமஸ்கிருதமும் வளர்ப்பது]க் கண்டித்து இந்தியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் மாநில அரசுகள் ஒருசேரக் குரல் எழுப்புவது மிக மிக அவசியம்.


இது, இது போன்ற ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தும் என்பது உறுதி.