அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 27 ஜனவரி, 2024

பெரிய பெரிய மதங்களும் பெரும் பேரழிவுகளும்!!!

ந்தத் தளத்தில் வெளியான இடுகைகளில் ஆங்காங்கே, ‘மதங்களால் அதிக அளவில் தீமைகளே விளைகின்றன[நன்மைகள் மிகவும் குறைவு]' என்னும் கருத்தாக்கம் வலியுறுத்தப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்.

‘கோரா’வில் சற்று முன்னர் வலம்வந்தபோது, வாசிக்க நேர்ந்த சில அன்பர்களின் பதிலுரைகள்[‘கேள்வி-பதில்’] மனதைக் கவர்ந்தன.

அவற்றை இங்குப் பகிர்ந்துள்ளேன்.

                                         *   *   *   *   *

தேவேந்திரன்

மதம் இல்லாத உலகம் என்னவாகத் தோற்றமளிக்கும்?

சமணர் கழுவேற்றங்கள் நடந்திருக்கமாட்டா.

சிலுவைப் போர்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை..

இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு அவசியமிருந்திருக்காது.

இலங்கைக்குள் யுத்தம் நடந்து, தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டிரார்.

பாகிஸ்தான் உருவாகியிருக்காது.

கோட்சே காந்தியைச் சுட்டிருக்கமாட்டான்.

வார்ணாசிரமம் தழைத்தோங்கி, மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்டவர் ஆக்கப்பட்டு, கடும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகியிரார்.

பெரியார் இராமசாமி, பெரியார் ஆகியிருக்கமாட்டார்.

பாபர் மசூதி இருந்திருக்காது,

பாஜகவும் இருந்திருக்காது.

மொத்தத்தில்,

புனிதம் என்ற சொல்லே இருந்திருக்காது.

மனிதம் இன்னும் மிகுந்திருக்கும்.

* * * * *

மார்செலோ எலியாஸ் டெல் வாலே

மதம் மனிதர் குலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலா?

ஆம், மதம் மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. குறைந்தபட்சம், இது தனி மனிதச் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மதம், வரலாற்று ரீதியாக, மக்களுக்குப் பெரும்பாலும் உதவியாக இருந்ததில்லை; மதவாதிகளின் சுயநலத்திற்காக அது எப்போதும் சேவை செய்கிறது. இது கட்டுப்பாடு, கையாளுதல் மற்றும் அந்நியப்படுத்துதல் ஆகியவற்றிற்கான கருவியாகும்.

* * * * *

Chandrasenan C G:

மதங்கள்... விளைவுகள்?

மதம் மனிதர்களுக்கு இடையே தீராத பகைமையையும் கொலை வெறியையும் வளர்த்ததுதான் மிச்சம். மதவெறியால் மனிதர்கள் லட்சக்கணக்கில் இறந்ததற்குச் சரித்திரம் சாட்சியாகும். நடுக்கிழக்கில் இருந்து வந்த அந்த இரண்டு மதத்தவரும் மனித இனத்தைச் சீரழிக்காமல் ஓயமாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்துக் கணிப்பு. 1.இயற்கைச் சீற்றங்கள் 2.யுத்தங்கள் 3.மதங்கள் ஆகியவற்றால் பெரும் பேரழிவுகள் நிகழ வாய்ப்புள்ளது.

மதம் சார்ந்தவர்கள் குற்றங்கள் புரிவதில்லை, அல்லது அதைக் குறைவாகச் செய்கிறார்கள் என்பதெல்லாம் பொய். சொல்லப்போனால், தங்களின் கடவுள்களையே உறுதுணையாகக்கொண்டு அதிக அளவில் அதைச் செய்கிறார்கள் என்று சொல்லலாம். மனிதர்களைச் சட்டங்கள்&தண்டனைகள் மூலமே கட்டுப்படுத்த முடியும் என்பது அறியத்தக்கது..... Yes, strong governance and rule of law alone solution for every thing.