எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 31 ஜனவரி, 2024

இனி, ‘பத்தரை மாற்று’ப் பக்தர்களுக்கு மட்டுமே பழனி கோயிலுக்குள் அனுமதி?

 


நீதிபதி அவர்களின் உத்தரவுப்படி, இந்து அல்லாதவர்களோடு மத நம்பிக்கை இல்லாதவர்களும் பழனி முருகன் கோயிலுக்குள் நுழைந்திட முடியாது என்பது உறுதியாகிறது.

இதன் மூலம் பழனி முருகனை வழிபடச் செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்ட இந்த அறிவிப்பை இந்தியாவிலுள்ள அனைத்து இந்துமதக் கோயில்களிலும் இடம்பெறச் செய்வது கட்டாயம் ஆக்கப்படுதல் வேண்டும்.

அப்படிச் செய்வதால், கோயிலுக்குச் செல்வோர் எண்ணிக்கை மேலும் குறையும்.

கோயில்களைத் தேடிச் செல்வோர் குறைந்துகொண்டே போனால், சாமிகளை நம்பி ஏமாறும் மூடர்கள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும் என்று நம்பலாம்.

எனவே, இவ்வகையிலான ஒரு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.

‘கடவுள் நம்பிக்கை உண்டு’ என்று பிற மதத்தவர்களிடம் எழுதி வாங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கை என்பது ஆளாலுக்கு வித்தியாசப்படலாம்.

95% கடவுளை நம்புகிறவர்களுக்கிடையே வெறும் 05% நம்புகிறவர்களும் இருக்கிறார்கள். அந்த 05 சதவீதத்தினரும், “அடுத்த வீட்டுக்காரனின் பெண்டாட்டி மீது எனக்கு ஆசை. அந்த ஆசையைக் கடவுளே நீதான் நிறைவேற்ற வேண்டும்” என்பது போல் கெட்ட கோரிக்கைகளுடன்  வருபவர்களாக இருக்கலாம்.

எனவே.....

கோயிலுக்கு வருகிற அத்தனைப் பேர்களிடமும், ‘நான் 100% கடவுள் நம்பிக்கை உள்ளவன். கெட்ட எண்ணங்களுக்குக் கொஞ்சமும் இடம் தராமல் 100% தூய மனதுடன் வந்திருக்கிறேன். என்னை[கடவுள் தண்டிப்பார் என்பதால் யாரும் பொய் சொல்லமாட்டார்கள்]க் கோயிலுக்குள் அனுமதியுங்கள்’ என்று எழுதி வாங்க வேண்டும்.

இப்படிச் செய்தால்.....

புனிதமான கோயிலுக்குள் நுழைபவர் எண்ணிக்கை.....

மிக மிக மிக மிக மிக.....க் குறையும்; அல்லது கோயிலைத் தேடி எவரும் செல்லமாட்டார்கள்.

இதன் விளைவாக, கடவுளை நம்பும் முட்டாள்கள் எண்ணிக்கை இந்த நாட்டில் மிக மிக மிகக் குறைவு[பிற மூடநம்பிக்கைகளும் அழிந்தொழியும்]’ என்னும் பெருமிதப்படத்தக்க மிக நல்லதொரு சூழ்நிலை உருவாகும்; நாடு செழிக்கும்!

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அன்பருக்கும், தீர்ப்பு வழங்கிய நிதிபதி அவர்களுக்கும் நம் மனம் நிறைந்த நன்றி!

                                 *   *   *   *   *
***பதாகைப் படம் ‘வினவு’ தளத்திலிருந்து நகல் எடுப்பப்பட்டது. ‘வினவு’க்கு நன்றி.