அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 5 மார்ச், 2024

வைகுண்டர் விழாவும் வாங்கிக் கட்டிக்கொண்ட ‘சனாதனக் காவலர்’ ஆளுநர் ரவியும்!!!

ய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “சனாதனத் தர்மத்தைக் காப்பதற்காகவே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, அய்யா வைகுண்டர் தலைமைப் ‘பதி அடிகளார் பாலபிராஜபதி’ கண்டனம் தெரிவித்துள்ளார். 


“எந்த ஒரு விசயத்தையும் ஆளுநர் ரவி புரிந்து பேச வேண்டும். ‘உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண் பெண் பேதம், சாதி ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் தேவையற்றவை’ என்பன போன்ற பல உயர் கோட்பாடுகளைக் கொண்டவர் அய்யா வைகுண்டர்.


எனவே, அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஆதரித்தவர் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரைச் சொந்தம் ஆக்கிக்கொண்ட[பட்டா போட்டு] அவரைக் கண்டிக்கிறோம்” என்பது பதி அடிகளார் அவர்களின் கண்டன அறிக்கை ஆகும்.


இது தினத்தந்தியில் வெளியான செய்தி.


https://www.dailythanthi.com/News/State/dont-talk-about-distorting-history-aya-vaikunder-chief-pathi-condemns-governor-rn-ravi-1096153?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhBAUQ6VKwIUuERCN2qDtgZWKhQICiIQQFEOlSsCFLhEQjdqg7YGVjDf4vQB&utm_content=rundown