ஞாயிறு, 26 மே, 2024

கள்ள உடலுறவும் கடவுள் சிலை உடைப்பும்!!!

திவின் தலைப்பை வாசித்ததும், மனிதர்கள் திருட்டுச் சுகம் காணுவதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதுதானே?

உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

சம்பந்தம் உண்டா என்பது பற்றிச் சிந்திக்கத் தூண்டியது  கீழ்க்ணும் நிகழ்வு.

இந்த நிகழ்வு குறித்த செய்தி வெளியானது தினத்தந்தியில்.

ஐயப்பன்[35] என்பவர் நெல்லை மாவட்டத்துக்காரர். எவரும் எதிர்பாராத[அவரே எதிர்பாராதது] வகையில், தான் பிறந்த ஊரிலுள்ள சுடலை[மாடன்?] கோயிலுக்குச் சென்று அந்தச் சாமியின் சிலையை உடைத்துவிடுகிறார்[பின்னர் தற்கொலை செய்துகொள்கிறார்]. காரணம் அறியாத ஊர் மக்கள் காவல்நிலையத்தில் புகார் தருகிறார்கள்.

உரிய விசாரணையில், அய்யப்பனின் மனைவி தன் கள்ளக் காமுகனுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்திருக்கிறார் ஐயப்பன் என்பது தெரியவந்தது. 

அவரின் மனைவி அவருக்கு இழைத்த துரோகத்துக்குத் தண்டனையாக அவரை அல்லவா தண்டித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. கள்ளக் காமுகனையும்கூடத் தண்டித்திருக்கலாம்.

மாறாக, கோயிலே கதி என்றிருக்கிற சுடலையார் சிலையை அவர் உடைத்தது ஏன்? எவரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.


நாம் புரிந்துகொண்டது..... 

ஐயப்பன் சுடலையின் தீவிரப் பக்தர். 

அவ்வப்போது தம் விருப்பங்கள் நிறைவேற, சுடலையிடம் கோரிக்கை வைப்பதை வழக்கமாக்கியவர். திருமணத்திற்குப் பெண் பார்த்தபோது தனக்கு உத்தமக் குணமுள்ள மனைவி வாய்க்க வேண்டும் எனறு கோரிக்கை வைத்திருப்பார். கடவுள் சுடலை அதை நிறைவேற்றவில்லை. 

அனைத்தையும் படைத்தவனும்/படைப்பபவனும், அவற்றிற்கு நல்ல குணங்களை மட்டுமல்லாமல் கெட்ட குணங்களைத் தந்தவனும்/தருபவனும்  கடவுளே[இங்கு சுடலை] என்பது தன் தற்கொலைக்கு முன்பு ஐயப்பன் அறிந்துகொண்ட தத்துவம்.

தன் மனைவிக்குக் கெட்ட புத்தியைக் கொடுத்தவனும் அவனே[சுடலை] என்பதால், குற்றவாளியான அவனின் சிலையை உடைத்திருக்கிறார். 

ஐயப்பனைப் போலவே மக்களனைவரும் சிந்திப்பார்களேயானால் உலகில் ஒரு சாமி சிலைகூட இருக்காது!

                                         *   *   *   *  *