எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 2 ஜூலை, 2024

அப்பாவிப் பெண்ணின் மூக்கு&மு... அறுத்தவனா அகிலம் போற்றும் கடவுள்?!?!?!

கேள்வி கேட்பவன் நான்.

தூண்டுதலாய் அமைந்தது....

நம் பாராட்டுக்குரிய, ‘முனைவர் ஆதிரை முல்லை’யின், ‘முதுமை என்னும் பூங்காற்று’ இதழில் வெளியான கட்டுரையின் குறிப்பிடத்தக்க ஒரு பத்தி.
அதன் நகல்:

ஆணாதிக்கத்தின் உச்சம் மட்டுமல்ல, அறிவின்மையின் வெளிப்பாடும்கூட.

வால்மீகியின் கற்பனைக் கதைமாந்தனான இவனைத்தான் கடவுளாக்கிப்[ஓர் அப்பாவிப் பெண்ணைத் தன் மீது ஆசைப்பட்டதற்காக அவமானப்படுத்தியவன்], பெரும்பான்மை மக்களை வழிபடச் செய்திருக்கிறார்கள் வாழ்ந்த/ வாழ்ந்துகொண்டிருக்கிற மகானுபவர்கள்.

இவனுக்குத்தான் அதிபிரமாண்டமான கோயிலை அயோத்தியில் கட்டிப் பெருமிதப்பட்டார்/படுகிறார் மோடி.

இவன் புகழ்பாடித்தான்[அநுமன், பிள்ளையார் என்று ஒரு நீண்ட பட்டியல் போடலாம்] சங்கிகள் இங்கே இந்துமதம் வளர்க்கிறார்கள்[மக்களுக்குத் தொண்டு செய்து மதம் வளர்க்கும் பெருந்தன்மையோ மனப்பக்குவமோ இவர்களுக்கு இல்லை; இல்லவே இல்லை].

இந்தியாவை ‘ராம ராஜ்ஜியம்’ ஆக்குவார்களாம்.

ஆக்கலாம். கூடவே இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நெற்றிகளிலும் ‘பட்டை நாமம்’ தீட்டலாம்.