செவ்வாய், 2 ஜூலை, 2024

அப்பாவிப் பெண்ணின் மூக்கு&மு... அறுத்தவனா அகிலம் போற்றும் கடவுள்?!?!?!

கேள்வி கேட்பவன் நான்.

தூண்டுதலாய் அமைந்தது....

நம் பாராட்டுக்குரிய, ‘முனைவர் ஆதிரை முல்லை’யின், ‘முதுமை என்னும் பூங்காற்று’ இதழில் வெளியான கட்டுரையின் குறிப்பிடத்தக்க ஒரு பத்தி.

அதன் நகல்:


ஆணாதிக்கத்தின் உச்சம் மட்டுமல்ல, அறிவின்மையின் வெளிப்பாடும்கூட.

வால்மீகியின் கற்பனைக் கதைமாந்தனான இவனைத்தான் கடவுளாக்கிப்[ஓர் அப்பாவிப் பெண்ணைத் தன் மீது ஆசைப்பட்டதற்காக அவமானப்படுத்தியவன்], பெரும்பான்மை மக்களை வழிபடச் செய்திருக்கிறார்கள் வாழ்ந்த/ வாழ்ந்துகொண்டிருக்கிற மகானுபவர்கள்.

இவனுக்குத்தான் அதிபிரமாண்டமான கோயிலை அயோத்தியில் கட்டிப் பெருமிதப்பட்டார்/படுகிறார் மோடி.

இவன் புகழ்பாடித்தான்[அநுமன், பிள்ளையார் என்று ஒரு நீண்ட பட்டியல் போடலாம்] சங்கிகள் இங்கே இந்துமதம் வளர்க்கிறார்கள்[மக்களுக்குத் தொண்டு செய்து மதம் வளர்க்கும் பெருந்தன்மையோ மனப்பக்குவமோ இவர்களுக்கு இல்லை; இல்லவே இல்லை].

இந்தியாவை ‘ராம ராஜ்ஜியம்’ ஆக்குவார்களாம்.

ஆக்கலாம். கூடவே இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நெற்றிகளிலும் ‘பட்டை நாமம்’ தீட்டலாம்.