எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 10 ஜூலை, 2024

'பெண் அணங்கு > வருத்துகிற தெய்வம்!’... இப்படியும் ஒரு தெய்வமா?!


காணொலியை ‘யூடியூப்’இல் வெளியிட்ட பிறகுதான், ‘பெண் அணங்கு’ என்று காணொலிக் கதைக்குத் தலைப்பிட்டது தவறோ என்று தோன்றியது.

‘அணங்கு’ என்னும் சொல்லுக்கு ‘வருத்தும் தெய்வம்’[தெய்வம் வருத்துமா?!] என்று அறிஞர் மு. வரதராசனார் தரும் விளக்கம்[கீழே > உரையாசிரியர்கள் பலரும் தரும் விளக்கமும் இதுவே] நினைவுக்கு வந்தது.

ஆடவனை ஒரு பெண் ‘உற்று நோக்குதல்’ வருத்தம் தருமோ அல்லவோ,  பெண்ணழகுக்கு மனதைப் பறிகொடுக்கத் தொடங்கிவிட்டால் அதிலிருந்து விடுபடுவது அத்தனை எளிதல்ல என்பதுதான் இந்தக் காணொலிக் கதையின் ‘கரு’வாகும்.