வெள்ளி, 12 ஜூலை, 2024

இதயத்தை நொறுக்கும் இனப் படுகொலைகளும் கருணைக் கடவுள்களும்!!!

மதம், இனம், மொழி என்று ஒரு குறிப்பிட்ட குழுவை அல்லது குழுவின் ஒரு பகுதியினரைக் கொன்றொழிக்கும் மிருகத்தனமான செயலே ‘இனப் படுகொலை’ என்னும் பொதுச் சொல்லால் அழைக்கப்படுகிறது. 

கொலை என்றில்லாமல், மன உளைச்சலையும் உடல் அளவிலான பெரும் தீங்குகளையும் உண்டுபண்ணிக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனத்தை அழிவை நோக்கிச் செல்லத் தூண்டுவதும் இனப் படுகொலைதான்.

அவர்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களைச் சிதைத்து, ஒன்றாக வாழவிடாமல் சிதறடிப்பது, இனவிருத்தி செய்யவிடாமல் தடுப்பது ஆகியவையும்    இவ்வகை  இனப்படுகொலைகளில் அடங்கும்.


உலகெங்கும் மிகக் கொடூரமான இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சில[பலவற்றையும் பதிவு செய்தால் அவை பக்கம் பக்கமாக நீளும்] எடுத்துக்காட்டுகள்:


*பங்களாதேஷ் இனப்படுகொலை:

வங்காளதேச விடுதலைப் போரில்,  பாகிஸ்தானின் இராணுவத்தினரால் சுமார் மூன்று மில்லியன் வங்காளிகள் கொல்லப்பட்டதோடு, 400,000 பெங்காலிப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டார்கள்.


*சூடான் கொலைகள்:

சூடானில் ’டார்பூர்’ இனப் படுகொலை 2003இல் தொடங்கியது; அரசாங்கப் படைகளால், பல விசுவாசமான போராளிக் குழுக்களின் உதவியுடன், சுமார் 400,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்.


*ருவாண்டா இனப்படுகொலை:

1994ஆம் ஆண்டில் ருவாண்டா இனப்படுகொலை நடைபெற்றது. ஹூட்டு இனத்தவர்களால் நிகழ்த்தப்பட்ட, இந்த இனப் படுகொலையில்,  ‘டுட்சி’ இன சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்த சுமார் 800,000 பேர்  கொல்லப்பட்டார்கள்.


*சர்க்காசிய இனப்படுகொலை:

19ஆம் நூற்றாண்டில், ரஷ்யப் பேரரசு, கிழக்கு ஐரோப்பாவில் காகசஸ் மலைகளின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கருங்கடலை எல்லையாக்கிக்கொண்டது.


கருங்கடலுக்கும் காகசஸுக்கும் இடையில் சர்க்காசிய இனப்படுகொலை நிகழ்ந்தது.


ரஷ்யப் பேரரசை எதிர்த்த முஸ்லீம் சர்க்காசியன் மக்கள் ஏறக்குறைய 750,000 பேர் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டோர் சதவீதம் அந்த இன மக்களில் 80[%] முதல் 97[%] வரை இருக்கக்கூடும் என்கிறது வரலாறு.


*கம்போடிய இனப்படுகொலை:

கம்போடிய உள்நாட்டுப் போரில், போல் பாட்டின் தலைமையின் கீழ் கெமர் ரூஜால் நிகழ்த்தப்பட்ட படுகொலை 1975 முதல் 1979 வரை நீடித்தது. இந்த மூன்று ஆண்டுகளில், கொல்லப்பட்டவர்கள் இரண்டு மில்லியன்  என மதிப்பிடப்பட்டுள்ளது.


*ஹோலோடோமர்:

சோவியத் யூனியனின் வரலாற்றில் மிகப்பெரிய கறைகளில் ஒன்று ஹோலோடோமோர், சில சமயங்களில் அது பயங்கரவாத-பஞ்சம் என்று குறிப்பிடப்படுகிறது. ஹோலோடோமோர் பொதுவாக ஜோசப் ஸ்டாலினின் தலைமையில் உருவாக்கப்பட்ட பஞ்சமாகக் கருதப்படுகிறது, இது ஐந்து மில்லியன் உக்ரேனியர்களின் உயிரைப் பறித்தது.


*ஹிட்லர் நிகழ்த்திய கொடூரக் கொலைகள்:

இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும் ஐரோப்பாவின் யூத மக்களுக்கு எதிராக ஹிட்லரின் ஆட்சி ஒரு பயங்கரமான இனப்படுகொலை நடவடிக்கையை மேற்கொண்டது, ஆஷ்விட்ஸ் போன்ற ஐரோப்பாவின் இருண்ட இடங்களாக இப்போது கருதப்படும் இடங்களில் அழிவின் மையப்பகுதிகளை உருவாக்கியது. மொத்தத்தில், ஹோலோகாஸ்ட் சுமார் ஆறு மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களைக் கொன்றது.


*கிழக்கு திமோர் இனப்படுகொலை

பெரும்பாலான வன்முறைகள் 1970களில் ஆக்கிரமிப்பின் முதல் கொந்தளிப்பான ஆண்டுகளில் நிகழ்ந்தன, ஆனால், நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆக்கிரமிப்பு முடிவடையும்வரை பயங்கரவாதம் முழுமையாக நிறுத்தப்படவில்லை. மொத்தத்தில், கிழக்கு திமோரில் 100,000 முதல் 300,000 வரையிலான பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன.


*ரோஹிங்கியா இனப்படுகொலை:

ரோஹிங்கியா இனப்படுகொலை 21ஆம் நூற்றாண்டின் மிகவும் கொடூரமான, மிக வருந்தத்தக்க இனப்படுகொலையாகும்.


பர்மிய அரசாங்கத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளால்[2016-21]ரோஹிங்கியா சிறுபான்மையினர் பலர் கொல்லப்பட்டதோடு, அவர்களில் 700,000க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக சர்வதேச அளவில் இடம்பெயர்ந்துள்ளனர். மியான்மர் எல்லையில் இருந்து தப்பிக்க முடியாததால், குறைந்தது 25,000 ரோஹிங்கியா பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


*கலிபோர்னியா இனப்படுகொலை:
அமெரிக்க மேற்கு(பொதுவாகக் கண்டம்) ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே பூர்வீக அமெரிக்கர்கள் வசித்துவந்தனர். கலிபோர்னியாவின் தங்கம் நிறைந்த மலைகளை ஆக்கிரமித்த குடியேறிகளால், 1846க்கும் 1873க்கும் இடையில், 100,000 க்கும் மேற்பட்ட பூர்வீக அமெரிக்க ஆண்கள், பெண்கள், குழந்தைகள்படுகொலை செய்யப்பட்டனர்.

***இன்றளவிலும் உலகம் முழுக்க இனப்படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை பெரும் எண்ணிக்கையில் நிகழும்போதுதான் செய்திகளில் இடம்பெறுகின்றன.

***நாம் வாழும் புண்ணியப் பூமியிலும் கடந்த காலங்களில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இன்றும் எங்கெல்லாமோ நிகழ்ந்துகொண்டுதான்[குறைந்த எண்ணிக்கையில்] இருக்கின்றன. அவை குறித்த தகவல்கள்.....

ஊஹூம்... வேண்டாங்க.

வழக்கம்போல் நாம் பக்தர்கள் முன் வைக்கும் கேள்வி:

கருணைக் கடவுள்களான கிருஷ்ணன், பரமேஸ்வரன், பரமேஸ்வரி, ஐயப்பன், நெய்யப்பன், ஏழுமலையான், மேருமலையான், விக்னேஸ்வரன், ஆஞ்சநேயன், அல்லா, கர்த்தர், என்று ஏராளக் கடவுள்களை நாள் தவறாமல் துதிபாடிக் கொண்டாடுகிறீர்களே இவர்களெல்லாம்.....

இவற்றையும், இவை போன்ற ஏராளப் படுகொலைகளையும் வேடிக்கை பார்த்ததும் பார்த்துக்கொண்டிருப்பதும் ஏன்?

பக்தர்களே,

“சொல்லுங்கள்” என்று நீங்கள் கேட்டால் இவர்களில் ஒருவராவது பதில் சொல்வாரா?

* * * * *
***தகவல்கள் இணையத்தில் தேடிச் சேகரித்துத் தொகுக்கப்பட்டன.