ஞாயிறு, 21 ஜூலை, 2024

'அங்கே’யும் சீல்!!![உள் மனதை உறுத்தும் உண்மைக் கதை]

கொஞ்சமும் கற்பனை கலவாத உண்மைக் கதை இது; நம்பத்தக்க நெருங்கிய உறவினர்  சில நாட்களுக்கு முன்பு சொன்னது.

கதையைத் தொய்வில்லாமல் கொண்டுசெல்வதற்கான உருவகம் & வர்ணனை போன்றவை தவிர்க்கப்பட்டு, மிக எதார்த்தமான பேச்சு நடை கையாளப்பட்டுள்ளது.

                                             *   *   *   *   *
புதுமணத் தம்பதிகளான கதிரவனுக்கும் கல்யாணிக்கும் அன்று ‘முதலிரவு’.

வழக்கமாக ஆண்கள் கையாளும் முன்விளையாடல்களை முடித்து, தனக்கானவளைப் பிறந்த மேனியளாக்கி ரசிக்க முற்பட்டபோது, அவளின் அடிவயிற்றில் வெளிறிய நிறத்தில் தென்பட்ட அழுத்தமான ஒரு கோடு கதிரவனைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

“இது எப்படி?” என்றான் கல்யாணியிடம்.

“ரொம்ப நாளா இருக்குது. எப்படி உண்டாச்சின்னு எனக்குத் தெரியாது.” -பேச்சில் தடுமாற்றம் தெரிந்தது.

முதலிரவை ஒத்திப்போட்டுவிட்டு, தரையில் பாய் விரித்துப் படுத்தான் கதிரவன்.

‘இது எப்படி? கன்னிப் பெண்களுக்கு இப்படி இருக்காதே.’ -இரவு முழுக்க இந்தக் கேள்வி அவனை உறங்கவிடாமல் தடுத்தது.

தனக்குத் தெரிந்த திருமணமான ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, சிலர் கை விரிக்க, நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் மட்டுமே சொன்னார்.....


“வயிறு வீங்கிப் பிறகு சுருங்கினா இது மாதிரிக் கோடு விழும். பிரசவத்தின்போது இது நடக்கும்.” 

இதைத் தன் புதுப் பெண்டாட்டியிடம் சொன்னான் கதிரவன்; “நீ கெட்டுப்போனவள்” என்றான் அழுத்தம் திருத்தமாக.

பல முறை மறுத்தாள் கல்யாணி.

கிளிப்பிள்ளையாய்ச் சொன்னதையே திரும்பத் திரும்ப ஆக்ரோசத்துடன் சொன்னான் கதிரவன்.

தன் மறுப்புரையால் இனிப் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்ட கல்யாணி.....

“ஆமாடா நான் கெட்டுப்போனவதான். எனக்கு விவாகரத்துக் கொடுத்துட்டு, அங்கே சீல்[பேச்சு வழக்கு > கட்டுக்கடங்காத கோபத்தின் வெளிப்பாடு] வைத்திருப்பவளைத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் செய்துக்கோ” என்று சொல்லி, தனக்கான உடைமைகளுடன் தன் தாய் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

                                            *   *   *   *   *

*****சிசேரியன் அறுவையாலும் கோடு(தழும்பு) விழும். மிக அரிதான சிலநோய் காரணமாக வயிறு பெருத்துப்போய்ச் சுருங்கினாலும் லேசான கோடு தெரியும்[எழுத்தாளர் வைரமுத்து, இந்தக் ‘கருவை ‘வைத்து எழுதிய ஒரு சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளியானது] என்று எப்போதோ எங்கோ வாசித்தது நினைவில் உள்ளது.