எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 20 ஜூலை, 2024

‘இந்தி’யன் & அடிவருடிகளுக்கு ஒரு மராட்டியர் தந்த மரண அடி!!!

புதிய இடுகை ஒன்று வெளியாகவிருந்த நிலையில் தற்செயலாக, கீழ்க்காணும் ‘யூடியூப்’ காணொலி கண்ணில்பட்டது.

இம்மாதிரிக் காணொலிகள் நிறைய வெளிவந்தால், இந்தி வெறியர்கள் திருந்துவார்களோ அல்லவோ, பதவிக்காக அவர்களின் அடி வருடும் சுயநலவாதிகள் கொஞ்சமேனும் திருந்துவார்கள் என்பது நம் நம்பிக்கை.

“இங்கு வரும்போதே தமிழ் கத்துகிட்டு வா. தப்பும் தவறுமாகவேனும் தமிழில் பேச முயற்சி பண்ணு” என்று அவர் சொல்லியிருந்தால் அது நமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்திருக்கும்[தாத்தாவுக்குத் தமிழ் தெரியும் என்பது நம் நம்பிக்கை].

எச்சரிக்கை!
‘இந்தி வெறி’ தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதை மறவாதீர்.

மறவாமல் காணொலியைப் பிறருடன் பகிருங்கள்.