வியாழன், 25 ஜூலை, 2024

‘நீட்’ தேர்வின் புனிதத்தன்மையும் கற்புடைமையும்!!!

 

‘நீட்’ என்பது, மருத்துவக் கல்விக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான, இயந்திரத்தனானதொரு  வழிமுறை மட்டுமே. 

இதில் புனிதம், மனிதாபிமானம், வெங்காயம், பெருங்காயத்திற்கெல்லாம் இடமே இல்லை

[University of Madras Lexicon > puṉitam (புநிதம்,) > 1.purity, தூய்மை; 2.holiness, பரிசுத்தம்] 

//"புனிதம்" என்றால் என்ன? எப்படி ஒரு பொருளை புனிதமானதாக கருதுவது? அந்த பொருளுக்கு எங்கிருந்து அந்த புனிதத்தன்மை கிடைக்கிறது?//

தூய அன்பால் போற்றப்பட்டு ஆராதிக்கப்படும் பொருள் புனிதமாகின்றது (Sacred), மனிதர் புனிதராகின்றார்; சிற்பியால் செதுக்கப்பட்டக்கருங்கல் சிலையாகி கோயில் கருவரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு போற்றித் துதிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவதால் புனிதமாகின்றது//

‘நீட்’டில் வினாத்தாள் விற்பனை[தேர்வுக்கு முன்னர்], ஆள்மாறாட்டம், மேற்பார்வையாளர்கள் கையூட்டுக்குப் பெற்று மாணவர்களுக்கு உதவுதல் போன்ற ஊழல்கள் வேண்டுமானால் இடம்பெற வாய்ப்புண்டு.

அண்மையில் அனைத்திந்திய அளவில் நடைபெற்ற இத்தேர்வில் இடம்பெற்ற ஊழல் உலகறிந்தது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தபோது புலனாய்வுத் துறையினர்[சிபிஐ] ஊழல் இடம்பெற்றதை[குறைந்த அளவில்!?!?!?] ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில்.....

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் இறுதிப் பகுதி:

#...இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்துள்ளதாக[ஊழல் புரிந்ததாக அல்ல???] அது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிபிஐ கூறி இருக்கிறது.

நீட் வினாத்தாள் பரவலாகக் கசியவில்லை[ஹி... ஹி... ஹி!!!] என்ற சென்னை ஐஐடி-ன் அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.

தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் சுயமாக[?] ஆய்வு செய்துள்ளது.

பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலையில், தேர்வின் முடிவு மோசமாக உள்ளது மற்றும் தேர்வின் ‘புனிதத்தன்மை’[?]க்குத் திட்டமிட்ட ரீதியில் மீறல் நடந்துள்ளது[‘தேர்வை ரத்து செய்யும் அளவுக்குப் பெரிய பாதிப்பு இல்லை’ என்றாலே போதும்தானே?] என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் இல்லை.

குறிப்பு:
செய்திக்கு[நகல் பதிவு] பாஜக சங்கிகள் கொடுத்துள்ள தலைப்பு கவனிக்கத்தக்கது.