“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.
தோல்வி கண்டால் வெகுவாகத் துவண்டுபோகிறவன் நான். இந்தக் காணொலி உரை எனக்கானதே[ஹி...ஹி...ஹி!!!]. என்னைப் போன்றவர்களுக்கும் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில் இதைப்[சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியானது] பகிர்கிறேன்.