அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
தோல்வி கண்டால் வெகுவாகத் துவண்டுபோகிறவன் நான். இந்தக் காணொலி உரை எனக்கானதே[ஹி...ஹி...ஹி!!!]. என்னைப் போன்றவர்களுக்கும் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில் இதைப்[சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியானது] பகிர்கிறேன்.