சனி, 27 ஜூலை, 2024

மசூதியை மறைக்க வெள்ளைத் திரை! சங்கிகளின் மன அழுக்கை மறைக்க?!?!

தெருவில் நடந்துசெல்கிறோம். நமக்குப் பிடிக்காதவர் எதிரே வருகிறார். எப்போதுமே அவரைப் பார்க்கப் பிடிப்பதில்லை என்பதால், முகத்தை வேறுபக்கம் திருப்பி அவரைக் கடந்து செல்கிறோம்.

நம் எதிரில் வரக்கூடாது என்றோ, தற்செயலாக வந்தால், “உன் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு போ” என்றோ அவரை எச்சரிக்க முடியுமா? அல்லது, ஒரு துணிகொண்டு நாமே அவர் முகத்தை மறைக்க இயலுமா?

அவர் நம்மைவிடவும் ஆள் பலம், பண பலம் என்று பல வகையிலும் தாழ்ந்தவராக இருந்தால் சாத்தியமே.

ஆனால்,

அவர் நம் கண்ணெதிரே வருவதைத் தடுத்தாலும், இதற்கு முன்பே சில முறைகளோ பல முறைகளோ அவரைப் பார்த்திருப்பதால், நம் மனத்திரையில் அவர் தோன்றுவதைத் தடுக்கவே முடியாது.

ஆக.....

அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் நம் வழியில் பயணிப்பதே[அது புனிதப் பயணமாயினும்] அறிவுடைமை ஆகும்.

ஒரு குறைந்தபட்ச அறிவு படைத்த மனிதனுக்கும்கூடக் கொஞ்சம் சிந்தித்தாலே புரிகிற உண்மை இதுவாகும்.

நம் நாட்டிலுள்ள இந்துமத வெறியன்களுக்கு[சங்கிகள்], இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது கீழ்க்காணும் ஊடகச் செய்தி.

இவர்களின் அடாத செயலை விமர்சிக்கப் பொருத்தமான சொல் பயன்பாட்டில் இல்லை; அகராதியிலும் இல்லை.

உங்களின் புத்திசாலித்தனைத்தைப் பயன்படுத்தி ஒரு சொல்லை உருவாக்கி உதவுங்களேன்.

* * * * *

#புனித மாதமான சவான் (ஷ்ரவான்) மாதம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் (Kanwariyas) பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஹரித்வார் செல்வார்கள்.

அவர்கள் கங்கையில் புனித நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனை கன்வார் யாத்திரை என அழைப்பார்கள். இந்த யாத்திரை ஆகஸ்ட் 2-ந்தேதி முடிவு


உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நகரில் கன்வார் யாத்திரை செல்லும் வழியில் உள்ள மசூதி மற்றும் மஸார் வெள்ளைத்துணி கொண்டு மறைக்கப்பட்டது[மோடி அரசு உடந்தை?] பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.


https://www.maalaimalar.com/news/national/kanawar-yatra-masjid-covered-by-white-cloth-condemned-by-congress-731243?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw4tWNAw&utm_content=rundown#



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக