செவ்வாய், 10 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’ என்னும் மூடனை வள்ளுவருடன் ஒப்பிட்டு மகான் ஆக்கும் சங்கிகள்!!!

#பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனன் ஆன மகா விஷ்ணு, சென்னை அசோக் நகர் பள்ளியில் மறுபிறவி, பாவம், புண்ணியம் பற்றிப் பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. மறுபிறவி என்பதே மூடநம்பிக்கை என்று வெவ்வேறு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபிறவி பற்றிய கருத்துக்கள், சங்க இலக்கியங்களில் நிறையக் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் போற்றிப் புகழப்படும் திருக்குறளில்கூட, இது குறித்த ஏராளமான குறட்பாக்கள் உள்ளன#

யாரோ முகவரி இல்லாத ஒரு சங்கியின் கருத்தை வெளியிட்டு, மகா விஷ்ணு என்னும் மகாப் பெரிய மூடனுக்கு[போன பிறவியில் செய்த பாவம்தான் அழகில்லாமலும் ஊனமாகவும் பிறக்கக் காரணம் என்கிறான்] வக்காலத்து வாங்கியிருக்கிறது தினமலம் இதழ்.







இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் போன்ற அறிஞர்களின் கருத்துகளில் சில காலப்போக்கில் அர்த்தமற்றதாக ஆகிவிடுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

வள்ளுவரும் மனிதர்தான்[தெய்வப் புலவரல்ல]. அவரின் கருத்துகள் காலமாறுதலுக்கு ஏற்ப மறுக்கப்படுவதில் தவறே இல்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் குறட்பா முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகும்.

அந்த அறிஞனின் ஆகச் சிறந்த 1330 குறள்களில் சில ஏற்கத்தக்கவை அல்ல என்பதால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் எவ்விதத்திலும் குறைந்துவிடாது.

இந்த அறிவியல் யுகத்தில், பாவம் தண்டனை என்று பேசித் திரியும் ஓர் எச்சக்கலையின்[‘முழுமுதல் கடவுள்’ என்னும் பெயரில்கூட ஊருலகை ஏமாற்றலாம்] உளறலுக்கு வள்ளுவரைத் துணைக்கு அழைப்பது அயோக்கியத்தனம் ஆகும்.

மூடநம்பிக்கைகளை வைத்தே பிழைப்பு நடத்தும் சங்கிகளின் ஆதரவோடு இவன் மாதிரியான நச்சுக் கிருமிகள் இனியும் உருவாகாமல் தடுப்பது நம் தலையாய கடமை ஆகும்.

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-reincarnation-ideas-abound-thirukkural-is-a-witness-to-maha-vishnus-speech--/3725845