திங்கள், 9 செப்டம்பர், 2024

கரையும் பிள்ளையார்! காலியாகும் பக்தர்களின் களிமண் மண்டைகள்!!

... பிள்ளையார் பக்தர்களே, ஆண்டு தவறாமல் களிமண் பிள்ளையார் சிலையை, நீங்கள் புனிதமானவை என்று நம்பும் அசுத்த நீர்நிலைகளில் கரைக்கிறீர்கள்.

பிள்ளையார் கரைகிற அதே வேளையில் உங்களுக்கு இருக்கிற கொஞ்சம் மூளையும் கரைகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை.

அறிவுறுத்தினாலும் திருந்தமாட்டீர்கள்.

இனி அடுத்தடுத்துவரும் பிள்ளையார் பிறந்த[சதுர்த்தி] நாட்களில், கரைப்பு விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்க்கும் பிற இந்துமதத்தவரையும், மிரட்டியோ, தேவைப்பட்டால் அடித்து உதைத்தோ கலந்துகொள்ளச் செய்வீர்கள் என்பது நம் எதிர்பார்ப்பு.

‘இந்து’ எனப்படுகிற அத்தனைப் பேரும் கரைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டால் உங்களைப் போலவே அவர்களின் மண்டை மூளையும் மிச்சம் மீதியில்லாமல் கரையும். கரைந்தால்.....

இந்தப் புண்ணியப் பாரதத்தில் பெரும்பான்மையாக உள்ள முட்டாள் இந்துக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகரிக்குமே தவிர அவர்களில் புத்திசாலிகளைக் காண்பது அரிதினும் அரிதாகும்.

முன்பு அறியாமையில் மூழ்கிக் கிடந்த இந்நாட்டு மக்களை அடக்கி ஆண்டு அடிமைகள் ஆக்கினார்களே ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும்[அவர்கள் பெற்றிருந்த அறிவியல் அறிவு அதற்குப் பயன்பட்டது], அதற்கு அந்தக் கால இந்துக்கள் புளுகுப் புராணக் கதைகளை நம்பி ஏறத்தாழக் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்ததுதான் காரணம்.

அந்த அவல நிலை எதிர்காலத்தில் மீண்டும் உருவாகலாம். அது நிகழாமல்போனாலும், பெரும்பான்மை இந்துக்கள் மீது கிறித்தவ மதமோ இஸ்லாம் மதமோ திணிக்கப்படலாம். 

இதன் விளைவாக இந்துமதம், இருந்த அடையாளம் தெரியாமல் முற்றிலுமாய் அழிந்துபோக நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த அவலம் நிகழாமலிருக்க, உடனடியாக இந்து மதத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.

தேவைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள தலைவர்களோ பக்தர்களைக் காட்டிலும் பல மடங்கு மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரியும் அவலம் நிலவுவது நாட்டின் நலனில் அக்கறை கொண்டோரை மிகுந்த கவலையில் ஆழ்த்துகிறது!